Thursday, February 20, 2014

                                        CBS  சாதனையா ?  சோதனையா ?
                               ஊழியர்களின்  வேதனை  தீருமா ?

CBS திருநெல்வேலியில் அறிமுகம் படுத்தப்பட்ட பிறகு அதில் பணிபுரியும் ஊழியர்கள் படுகிற கஷ்டங்கள் சொல்லி முடியாத ஒன்று .
     சில நாட்களில் இரவு 10 மணிக்குத்தான் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டே செல்ல முடிந்தது .சராசரி ஒரு TRANSACTION முடிவதற்கு 10 முதல் 20 நிமிடங்கள் ஆகிறது .புதிய கணக்கு தொடங்குவதற்கு CIF  ID  பெறுவதற்கே 20 நிமிடங்கள் ,அதுபோக கணக்கு தொடக்கி முடிக்க மேலும் 20 நிமிடங்கள் ஆகிறது .MIS வட்டி வழங்குவதற்கு குறைந்த பட்சம் 6 முறை SCREEN மாறி செல்ல வேண்டியது உள்ளது .பல நாட்கள் SB  வாடிக்கையாளர்கள் பொறுமை இழந்து செல்லும் நிலை உள்ளது .இது குறித்து கோட்ட அலுவலகத்திற்கு TIRUNELVELI  POSTMASTER 18.02.2014  அன்று விரிவான கடிதம் எழுதி உள்ளார்கள் .கோட்ட நிர்வாகம் விரைந்து இந்த விசயத்தில் தலையிட்டு  கூடுதலாக ஒரு கவுன்ட்டர் தற்காலிகமாக திறக்க வேண்டும் .மேலும் BACK OFFICE   இல் ஏற்பட்டுள்ள பற்றாகுறை தொடர்கதையாகிறது . இந்த RT  இல் திருநெல்வேலி HO  வில் இருந்து பல மாதங்களாக DEPUTATION    இல் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் திரும்ப அழைக்க வேண்டும் என கோட்ட நிர்வாகத்திற்கு கேட்டு கொள்கிறோம் .          

No comments:

Post a Comment