Monday, August 25, 2014

                       ஊதிய குழு -நமது கோரிக்கைகள்  --2

அன்பார்ந்த தோழர்களே ! சென்ற பதிப்பில் ஊதிய நிலைகளை குறித்து பார்த்தோம் .இன்று மற்ற கோரிக்கைகளை குறித்து பார்போம் .

1. பணிக்கா லத்தில் இறக்கும் ஊழியர்களின் அனைத்து அரசு கடன்களும் ரத்து செய்ய பட வேண்டும் ( இந்த கோரிக்கை நமது கோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கையாகும் )

2.ஊதிய விகிதங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் .

3.குழந்தைகள் கல்விப்படி என்பது உயர் கல்விக்கும் பொருத்தப்பட்டு பட்ட படிப்பு  வரை தொடர வேண்டும் (இந்த கோரிக்கை நமது கோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கையாகும் )

4.ஆண்டு ஊதிய உயர்வு என்பது ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை முதல் தேதி என்ற வகையில் இரு நாட்களில் முறையே வழங்குதல் .மற்றும் டிசம்பர் 31.ஜூன் 30 ஆகிய தேதிகளில் ஓய்வு பெறுவோருக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை வழங்கிய பின் ஓய்வு கால நன்மைகளை கணக்கிட வேண்டும் .

5.உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது ,இரு தரப்பு ஒப்பந்தம் என்பதால் அது ஊதிய குழுவின் பரிசீலனையில் இருந்து அகற்ற வேண்டும் .

6.வீடு கட்ட முன்பணம் வழங்கும் முறை எளிமையாக்கப்பட வேண்டும் .பழைய மற்றும் கட்டப்பட்ட வீடுகளையும் வாங்க அனுமதிக்க வேண்டும் .

7.வீட்டு வாடகை படி 9HRA ) என்பது X  நகரங்களுக்கு 60% ,இதர தரம் பிரிக்கப்பட்ட நகரங்களுக்கு 40% தரம் பிரிக்க படாத நகரங்களுக்கு 20% என்பதாக இருக்க வேண்டும் .

8ஆறாவது ஊதிய குழுவின்  அனைத்து முரண்பாடுகளும் களைய பட வேண்டும் 
                           (  தொடரும் )

                                                                      தோழமையுடன் 
                                                    SK .ஜேக்கப் ராஜ்  நெல்லை கோட்ட செயலர் 

No comments:

Post a Comment