Monday, November 3, 2014

                                  வாழும் தலைவர்கள் வரலாறு 

                                                   தோழர் டி .ஞானையா --4

                                                          1968 வேலைநிறுத்தம் 

1967 ம் ஆண்டு ஜனவரி 30 மற்றும் 31 இல் நடந்த  JCM  National Council கூட்டத்தில் மூன்று கோரிக்கைகளை அரசிடம் முன் வைக்க முடிவு செய்யப்பட்டது 1.முழு ஈடுகட்டும் பஞ்சப்படி (Full Neutralisation ).2.தேவை அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் (Need Based Minimum Wage )
3.பஞ்சப்படி கணக்கிடும் முறையில் மாற்றம் . ஆனால் அரசாங்கம் .பஞ்சப்படி கணக்கிடும் முறையில் மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது .மற்ற இரண்டு கோரிக்கைகளிலும் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது .அரசாங்கம் ஏற்றுகொள்ளாத கோரிக்கைகளை நடுவினர் தீர்ப்புக்கு (Arbitration ) விட்டுவிடவேண்டும் என்பதே JCM இன் அடித்தளம் .ஒரே ஆண்டில் அரசாங்கம் இந்த உடன்பாட்டை மீறியதும் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியவில்லை .                                       

ஆகையால் 19.09.1968 நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் மத்திய அரசு ஊழியர்களால் நடத்தப்பட்டது .தோழர் ஞானையா அவர்கள் இந்த போராட்டத்தை தலமை தாங்கி நடத்தினார்கள் .செப்டம்பர் 18 இம் தேதி அதாவது வேலை நிறுத்ததிற்கு ஒரு நாள் முன்னதாகவே தோழர் ஞானையா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து தோழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது .டெல்லியில் மட்டும் அனைத்து தபால் தந்தி ஊழியர்கள் சுமார் 20000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் .மேலும்  2000 பேர்  சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்தனர் 
                                                                                                                                    (தொடரும் )

 தோழர் ஞானையாவின் தனி சிறப்புகளில் ஒன்று --அன்றைய பாரத பிரதமர்கள் இரண்டு பேருடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தியவர் . 

  

No comments:

Post a Comment