Sunday, November 30, 2014

தோழியர் C .பொற்கொடி PA திருநெல்வேலி  கலக்ட்ரேட்   அவர்கள் 01.12.2014 அன்று தன்விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE இன் அன்பு வாழ்த்துக்கள் 

பொற்கொடி என்ற 
நற்கொடியும் --நம் 
துறை தாண்டி படர பார்க்கிறது 

விருப்ப ஓய்வு எனும் --நாம் 
விரும்பாத இடம் தேடி 
புறப்பட போகிறது 

பொறுமைக்கு பெருமை சேர்த்தவர் 
அமைதிக்கு அழகு கூட்டியவர் 
தந்தை KTC அவர்களின் தடம் தொடர்ந்து 
தமக்கையோடு NFPE தம்பியர்களை ஆதரித்தவர் 

எவரிடமும் கடிந்து கொண்டதில்லை 
எள்ளளவும் கவலை கண்டதில்லை 
உரிமையோடு எங்களை கண்டித்த தோழியர்களில் 
அவரும் ஒருவர் 

பெருமையோடு சொல்லவேண்டும் என்றால் 
பொற்கொடி  --போர்க்கொடி அல்ல 
பொறுமை கொடி 
NFPE மகளிர் அரங்கில் என்றும்  
பறந்திட வேண்டும் இந்த புகழ் கொடி ......

          வாழ்க பல்லாண்டு... 
                                                            தம்பி ..  ஜேக்கப் ராஜ் 

No comments:

Post a Comment