Tuesday, September 6, 2016

                                                               செய்திகள் 
01.09.2016  அன்று நடைபெற்ற ஊதியக்குழு தொடர்பான கூட்டத்தில் ஊழியர் தரப்பு சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகள் வலுவாக எடுத்துரைக்கப்பட்டது 
.1.புதிய அலவன்ஸ் 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படவேண்டும் 
2.வீட்டு வாடகைப்படி 10% 20% 30% சதம் இருக்கவேண்டும் 
3.போக்குவரத்து படி அறிவுபூர்வமாகவும் ,வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்  
4.CEA  உயர்கல்விக்கு விரிவு படுத்தப்படவேண்டும் வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்  
--------------------------------------------------------------------------------------------
.                                
                           அஞ்சலக ஆய்வாளர் தேர்வு 
      2014--2015 க்கான   IP  தேர்வுகள் எதிர்வரும் அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது 
தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                      முன்னாள் மாநில செயலர் அண்ணன் பாலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் 23.10.2016 ( ஞாயிறு) அன்று நாகர்கோயிலில் நடைபெறுகிறது .குமரி கோட்ட தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் .நாம் ஏற்கனவே அறிவித்தபடி அண்ணன் பாலு அவர்கள் குறித்த படைப்புகள் நினைவு மலரில் வெளியிடவுள்ளோம் .ஆகவே படைப்புகளை /புகைப்படங்களை அனுப்புவோர் விரைந்து அனுப்பிடுமாறு கேட்டு கொள்கிறோம் .அனுப்பவேண்டிய முகவரி ( SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  NFPE P3 பாளையம்கோட்டை  HO )  (94421-23416)
அண்ணாசாலை ,காஞ்சிபுரம் ,விருதாச்சலம் பகுதியில் இருந்து வந்த   படைப்புகளுக்கு நன்றி .தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம் .விரைந்து அனுப்புவீர் !வரலாற்று பெட்டகத்தில் உங்கள் பெயர் இடம்பெற  இன்றே அனுப்புவீர் !
                                                                                தோழமையுடன் 
                                                        SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment