Wednesday, April 5, 2017

அன்பார்ந்த தோழர்களே !
நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை பெற்றது.நமது நோக்கம் அடுத்தவர்களின் தவறுகளை பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பதல்ல --அதே நேரத்தில் எந்த ஒரு ஊழியர்களுக்கும் விதிகளை மீறி பாதிப்புகள் வரும் பொழுது அதை வேடிக்கை பார்ப்பதும் நமது நிலையல்ல .மேற்கொண்டு மாநில சங்கத்தை அணுகி மண்டல அலுவகத்தில் புகார் கொடுத்து விசாரணைக்கு வழி செய்யப்போகிறோம் .ஆகவே தோழர்கள் மேற்கொண்டு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் .கவிஞர் மேத்தா அவர்களின் வரிகளை நாம் நிரூபித்திருக்கிறோம் .
                      காத்திருக்கும் வரை --நம் பெயரும் 
                      காற்று என்றே இருக்கட்டும் 
                      புறப்படும் போது 
                      புயல் என்று  நிரூபிப்போம் 
              வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

No comments:

Post a Comment