Wednesday, May 10, 2017

         நெல்லையில் நெஞ்சை  நெகிழவைத்த கருணை விழா !
ரோட்டரி சங்கம் என்றால் மேட்டுகுடிமக்களின் பொழுதுபோக்கு அரங்கம் --சீமான்களின் சொர்க்கபுரி என்ற பரவலான கருத்துக்களை உடைத்து நெடுங்காலமாக  நமது துறையில் மட்டுமல்ல பல துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை பாராட்டி பத்திரம் வழங்கிவருவதை நாம் பார்த்திருக்கிறோம் வெறும் பாராட்டுகளை  தாண்டி பல குழந்தைகளை பராமரிக்கும் முயற்சியாக  நெல்லை தலைமைஅஞ்சலகத்தில் 09.05.2017 அன்று 75குழந்தைகளுக்கு தன் சொந்த செலவில் SSA கணக்குகளை தொடங்க ரூபாய் 75000
வழங்கிய  
                          கொடைவள்ளல் ROTARIYAN 
 (ZONAL 7) மயில் T .பாலசுப்ரமணியம் அவர்களை நெல்லை அஞ்சல் ஊழியர் சங்கம் வாழ்த்துகிறது வணங்குகிறது -இதற்கு முதல் மற்றும் முழு காரணமாக இருந்த எங்கள் மூன்று முத்துக்களில் ஒருவர் கோட்ட சங்க அமைப்பு செயலர் தோழர் முத்துமாலைக்கும் எங்கள் மலர் மாலைகள் 
    அன்ன சத்திரம் ஆயிரம்வைத்தல் 
   ஆலயம் பதினாறாயிரம் நட்டல் 
  பின்னருள தர்மங்கள் யாவும் 
 பெயர் விளங்க ஒளிர நிறுத்தல் 
 அன்ன ஆவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுதறிவித்தல் --என்ற பாரதியின் வரிகளில் கடைசியாக ஏழை குழந்தைக்கு SSA கணக்குகள் தொடங்க 
என்ற யதார்த்தத்தை நிகழ்த்திய கொடைவள்ளல் வாழ்க !
 இப்பொழுது75    எப்போதும்  உங்களோடு என வாழ்த்துகிறார் 
கொடைவள்ளல் ROTARIYAN 
 (ZONAL 7) மயில் T .பாலசுப்ரமணியம்
  நமது SSP --ASP வாழ்த்துக்களின் நடுவே தோழர் முத்துமாலை






No comments:

Post a Comment