Saturday, July 29, 2017

                                          மாநாடுகள் வெல்லட்டும் 
அன்பார்ந்த பேரவை சொந்தங்களே !
நாளை 30.07.2017 அன்று சேலம் மேற்கு கோட்ட மாநாடு நடக்கிறது .தோழர் புகழேந்தி அவர்களின் தலைமையில் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .மாநிலசெயலர் தோழர் JR .சுந்தரமூர்த்தி ஜேக்கப் ராஜ் மற்றும் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொள்கிறார்கள் .
                                    காரைக்குடி கவலை நீங்குகிறது 
சில பல காரணங்களால் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த காரைக்குடி கோட்ட மாநாடு நாளை 30.07.2017  நடைபெறுகிறது .இதற்கு முழு முயற்சிகளை எடுத்த நமது பேரவை தலைவர் KVS அவர்களுக்கும் காரைக்குடி தோழர் குருராஜன் அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .நமது நிதிச்செயலர் தோழர் A .வீரமணி அவர்கள் கலந்துகொள்கிறார்கள் .தமிழகத்தில் இனி எந்த கிளைகளும் செயலிழந்த கிளை இல்லை  எல்லா கோட்டங்களிலும் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது என்ற செய்தி நமக்கு அமைப்பு ரீதியாக மேலும் ஒரு பலம் என்பதனை நினைவில்கொள்வோம் .
நன்றி SK .ஜேக்கப் ராஜ் 
-----------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment