Tuesday, December 26, 2017

                                                   செய்திகள் ...சில
அன்பார்ந்த தோழர்களே !
             எனக்கு (ஜேக்கப் ராஜ் )நாளைமுதல் 27.12.2017 முதல் 29.12.2017 வரை மதுரையில் CSI பயிற்சி இருப்பதால் 29.12.2017 சென்னை தர்ணாவிற்கு என்னால் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .ஆகவே நமது கோட்டத்தில் இருந்து 29.12.2017 சென்னை தர்ணாவிற்கு செல்ல முன்பதிவு செய்திருந்த தோழர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் தலைமையில் பங்கேற்கிறார்கள் .அஞ்சல் ஊழியர்களின் பணிகளை களவாடி தனியார் ஏஜென்சிகளிடம் விற்க என்னியுள்ள அரசு மற்றும் அஞ்சல் நிர்வாகத்தின்  Outsourcing Potal Agency திட்டத்தை முறியடிப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                 இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல 
புத்தாண்டு டைரி பணிகள் நிறைவு பெற்று விட்டன .01.01.2018 அன்று நிச்சயம் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் சேரும் வகையில் அனுப்பப்படும் .இதற்காக ஒத்துழைப்பு கொடுத்த அம்பை -PSD மற்றும் SBCO (NFPE ) அனைவருக்கும் நன்றி .தொடர்ந்து 10ஆண்டுகளாக வெளியிட உதவிய அனைத்து தோழமைக்கும் எங்கள் நன்றிகள் ...
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                   நன்றி .....நன்றி 
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உள்ள சுத்தியோடு பரிமாறிக்கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் மற்றும்  மேலிட தொழிற்சங்க தலைவர்களுக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment