Monday, January 7, 2019

                         வெல்லட்டும் !வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
        அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இருநாட்கள் மத்திய தொழற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் நமது அஞ்சல் பகுதியில் NFPE மற்றும் FNPO சம்மேளனங்கள் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன .சூப்பர்வைசர் அஸோசியேஷன் என்றழைக்கப்படும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களும் பங்கேற்கவேண்டுமென அச்சங்கத்தின் பொதுச்செயலர் அழைப்பு விடுத்துள்ளார் .ஆகவே நாட்டிலுள்ள மத்திய தொழிற்சங்கங்களான INTUC  AITUC HMS CITU உள்ளிட்ட அமைப்புகள் நாடுமுழுவதிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராட ஊழியர்களை தயார்படுத்தி வருகின்றன .
                      08.01.2019 காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் 
 நமது போராட்டத்தின் முதல்நாளான 08.01.2019 அன்று காலை 10 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .நமது போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பும் போராட்ட ஆதரவு ஆர்பாட்டங்களில் கலந்துகொள்கின்றன 
                                    அஞ்சல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை 
இதற்கிடையில் அஞ்சல் நிர்வாகம் போராடும் அனைத்து அஞ்சலக சங்க பிரதிநிதிகளுடன் 07.01.2019 அன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது .
                                          வேலைநிறுத்தம் குறித்து விருதுநகர் கோட்ட சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது.கூட்ட முடிவில் ஆண்டுகள் இரண்டு கடந்தும் இரண்டு நாட்கள் வேலை பார்த்ததுக்கு சம்பளம் கொடுக்காத அஞ்சல் துறைக்கு வேலை நிறுத்தத்துக்கு சம்பளத்தை பிடிக்க தார்மீக நியாயமில்லை. எனவே இரண்டு நாட்களுக்காக சம்பள உத்தரவு வரும் வரை சம்பள பிடிப்பு கூடாதென நிர்வாகத்தை வற்புறுத்துமாறு தீர்மானம் இயற்றப்பட்டது
                     அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் நாமும் பங்கேற்போம் .
                             வேலைநிறுத்த வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                  

No comments:

Post a Comment