Wednesday, January 16, 2019

         இன்று பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர் தினம் 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு . . !!!
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று  உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தையோ தனி ஒரு கடவுளை பற்றியோ மதத்தை பற்றியோ குறிப்பிட்டது இல்லை  அதனால் தான்  இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்..உலகில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிக புழக்கத்தில் உள்ள நூல் திருக்குறள் என்பது மேலும் ஒரு சிறப்பு 
வாழ்த்துக்களுடன் நெல்லை NFPE 


No comments:

Post a Comment