Monday, February 18, 2019

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சுற்றறிக்கைகளில் இருந்து ....
  ஏழாவது ஊதியக்குழுவில் நாம் கோரிய எந்த மாற்றங்களையும் அரசு செய்திடவில்லை .HRA மாற்றம் MACP பெஞ்சுமார்க் நீக்கம் போன்ற எந்த கோரிக்கைகளிலும் முன்னேற்றம் இல்லை .மத்திய அரசு துறைகளிலே 6 லட்சம் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன .பாதுகாப்பு துறை முதல் ரயில்வே வரை தனியாருக்கு அனுமதி அரசு அச்சகங்கள் மூடல் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையிலான மிரட்டல்கள் மற்றும் NPS திட்டத்தை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்திட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளன .
அதன்படி மாவட்ட தலைநகரங்களில் 
11.04.2019 அன்று தர்ணா 
23.04.2019 அன்று முழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் 
இவைகளுக்கு முன்னதாக NPS கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி புதுடெல்லியில் 13.03.2019 அன்று தர்ணா நடத்துவது என்று முடுவெடுக்கப்பட்டுள்ளது .
 நமது கோட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி அதற்கான இயக்கங்களை நாம் நடத்திடுவோம் !
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

No comments:

Post a Comment