Thursday, July 25, 2019

அஞ்சல் கூட்டு போராட்டக்குழு (NFPE -FNPO) அறிவித்துள்ள போராட்ட அறிவிப்புகள் 
                          அஞ்சல் துறையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திட வலியுறுத்த கடந்த 13.07.2019 அன்று புதுடெல்லியில் கூடிய போஸ்டல் JCA (NFPE -FNPO) கீழ்கண்ட போராட்ட திட்டங்களை அறிவித்துள்ளன .
29.07.2019  -ஆர்ப்பாட்டம் -PJCA தயாரித்துள்ள கோரிக்கை மனுவினை கோட்ட அதிகாரிகளிடம் அளிப்பது 
21.08.2019 கோட்ட அளவில் தர்ணா 
11.09.2019 மாநில அளவில் தர்ணா 
04.10.2019 டெல்லியில் தர்ணா 
                                            ஒவ்வொரு வருடமும் இதேபோல் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி டெல்லிவரை தர்ணாவோடு முடிகிறது நமது போராட்டங்கள் .ஆனால் அஞ்சல் துறையில் ஊழியர்களின் கோரிக்கைகள் அப்படியே இருக்கிறது 
வாரத்தில்  5.நாள் வேலை -என நமது கோரிக்கை -ஆனால் வாரம் முழுவதும் நமக்கு வேலை 
MACP பதவிஉயர்விற்கான பெஞ்ச் மார்க் நீக்கப்பட வேண்டும் 
காலிப்பணி இடங்களை நிரப்பிடவேண்டும் 
விடுபட்ட பகுதியினருக்கு கேடர் சீரமைப்பை அமுல்படுத்து 
உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளுக்கு உயிர் கொடுப்போம் .
இதுகுறித்தும் -நமது செயற்குழு முடிவுகள் குறித்தும் விரிவான அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

No comments:

Post a Comment