Friday, August 23, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
               புதிய தோழர் தம்பி ராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறோம்       
     நமது நெல்லை அஞ்சல் நான்கின் முன்னனி தோழர் பொன்னுசாமி (ஓய்வு ) அவர்களின் அருமை புதல்வர் 
தம்பி .ராமகிருஷ்ணன் PA நாகப்பட்டினம் அவர்கள் நமது நெல்லை கோட்டத்திற்கு RULE 38 இன் கீழ் இடமாறுதல் பெற்று வருகிறார்கள் .தொழிற்சங்கத்தில் பல   இளைய தோழர்களின் பயிற்சி பட்டறையாக இருக்கும் நாகை கோட்டம் மெருகேற்றி தந்திருக்கும் மற்றுமொரு தோழரை வரவேற்பதில் நெல்லை பெருமிதம் கொள்கிறது .
                                  தோழர் மோகன் விடைபெறுகிறார் 
மிக நீண்ட காத்திருப்பிற்கு இடையே   நம்மிடம் கவிதைகளையும் கவலைகளையும் கலந்து தந்துகொண்டிருந்த இளைய கவி .தோழர் மோகன் MTS    அவர்களுக்கு ஆறுதல்   இடமாறுதலாக ஆறுமாதங்கள் தற்காலிக இடமாறுதல் அவரது சொந்த கோட்டமான ராமநாதபுரத்திற்கு செல்கிறார் .அவர்களையும் நாம் வாழ்த்தி வழியனுப்புவோம் .
                          நெல்லை அஞ்சல் நான்கின் மாநாடு வருகிற 22.09.2019 அன்று திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது .மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் .நமது தோழர்களுக்கும் மாநாட்டிற்கு உதவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை   

1 comment: