Saturday, March 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                        *கொரானா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு மத்திய பயிற்சி மற்றும் பணியாளர்கள் அமைச்சகம் 20.03.2020 தேதியிட்ட உத்தரவு படி 50 வயதிற்கு மேலுள்ள ஊழியர்கள் சிறுநீரக பிரச்சினை சுவாச பிரச்சினை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஏப்ரல் 4 ம் தேதிவரை மருத்துவ சான்றிதழ் இல்லாமல் COMMUTTED LEAVE எடுக்கலாம் என்று கூறியுள்ளது .
                   *தென் மண்டலத்தில் நடைபெறவிருந்த அனைத்துவிதமான மேளாக்களும் நிறுத்தப்படுவதாக தென்மண்டலஅலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது *
               *நேற்று 20.03.2020 அன்று நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .RT விண்ணப்பிக்கும் முன் நமது உறுப்பினர்கள் கோட்ட சங்க நிர்வாகிகளிடம் சந்தேகங்கள் இருந்தால் விளக்கங்கள் கேட்டு பெறலாம் .நேற்றைய கூட்டத்தின் நோக்கம் தனி ஊழியர்களுக்கான சிபாரிசுக்காக நடத்தப்படவில்லை .RT குறித்த வழிகாட்டுதல்கள் சீனியாரிட்டி மற்றும் நமக்குள்ளே ஒரு கலந்தாய்விற்க்காக மட்டுமே நடந்த ஒருகூட்டம் .அனைவருக்கும் அவரவர் சீனியாரிட்டி தெரிந்திருக்கும் அதனடிப்படையில் விருப்ப இடங்களை தெரிவு செய்திட  வழிகாட்டப்பட்டது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -கோட்ட செயலர் நெல்லை 

No comments:

Post a Comment