Friday, April 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
              உயிரோடும் உரிமையோடும் விளையாடும்  வெண்ணிலவே !
          வேலைநேரம் முடியும் பொழுது நேற்றுவரை எத்தனை பரிவர்த்தனைகள் நடந்தது என கேள்விகள் கேட்கப்பட்டது .ஆனால் இன்றுமுதல்  பெண்டிங் மணியார்டர் மற்றும் தபால்கள் எத்தனை என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன .ஒவ்வொரு கோட்டத்திலும் ஏன் இத்தனை தேக்கங்கள் என விளக்கம் வேறு ! நிர்வாகம் தான் சொன்னது வீட்டுக்கு வீடு பட்டுவாடா இல்லையென்றாலும் விண்டோ டெலிவரி  செய்யவேண்டும்  என்ற அறிவிப்புகள் எங்கே போனது ?
         சில தோழர்கள் கேட்பது போல் ரோஸ்டரில் எங்கள் பெயர் இருப்பதால் தான் நாங்கள் பணிக்குவரவேண்டிய கட்டாயம்     ஏற்பட்டது என்கிறார்கள் .அவர்களுக்கு நமது விளக்கம் 
ரோஸ்டர் என்பது குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது அலுவலகத்தை இயக்க      வேண்டும் என்பதற்குத்தானே தவிர 
அலுவலகத்திற்கு வர இயலாதவர்கள் விடுப்பு விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருக்கலாம் .விடுப்புக்கு முன் அனுமதி தேவை என்கிறார்களே இங்கு யாருக்காவது விடுப்பு மறுக்கப்பட்டுள்ளதா ? என்பதனையும் சிந்திக்கவேண்டும் .
                        நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை    
       

No comments:

Post a Comment