Friday, May 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                          தொழிலாளியை  வி(மி )ரட்டும் கொ ரானவை விட பேராபத்து -தொழிலாளர் சட்ட திருத்தும் 
  கொரானா எனும் சர்வதேச பரவலை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில் மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைப்பதில் முனைப்பு காட்டிவருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது ..நடப்பில் உள்ள 44  தொழிலாளர் சட்டங்களை வெறும் 4  சட்டங்களுக்குள் அடக்கிவிட அல்ல அல்ல ஒடுக்கிவிட  மத்தியஅரசு முனைகிறது ..இன்று நடப்பில் உள்ள ஒவ்வொரு நலச்சட்டத்துக்கும் ஒரு வரலாறு உண்டு .குறிப்பாக EPF (1952)ESI போனஸ்(1965) பணிக்கொடை (1972) தொழில் தகராறு சட்டம் (1967) ஈட்டுறுதி .குறைந்தபட்ச ஊதியம் தொழிற்சாலை நிலை ஆணைகள் தொழில் பழகுநர் சட்டம் என்று வகைப்படுத்தப்பட்ட சட்டங்களால் தொழிலார்கள் நலன் ஓரளவாவது பாதுகாக்கப்பட்டு வந்தது .நாளொன்றுக்கு 8 மணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரவேலை என்பதனை மாற்றி 
நாளொன்றுக்கு 12 மணி நேரம் வாரத்திற்கு 72  மணி நேரவேலை என்கின்ற அடிப்படையில் தொழிலரலர் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன .முந்தைய ஆட்சிக்காலத்தை விட தற்சமயம் இதனை அமுல்படுத்திட அதீத ஆர்வம் காட்டப்படுகின்றன .
உபி மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன .ம்.பி .மாநிலத்தில் 1000  நாட்களுக்கு இந்த சட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன .இவைகளை தொடர்ந்து குஜராத் அசாம் கர்நாடக திரிபுரா பஞ்சாப்  என எல்லா கட்சி ஆட்சிசெய்யும்  மாநிலங்களும்  இதே பாதையில் பயணிக்கின்றன .
                                இன்று சாதாரண மக்களின் வாழ்வே கேள்விக்குறியாக இருக்கின்ற இந்த சூழலை பயன்படுத்தி  ஆளும் அரசு தொழிலாளின் மீது தொடர் தாக்குதலை தொடர்ந்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது .இதனை உழைக்கும் வர்க்கம் மட்டுமல்ல உழைக்கும் வெகுஜன அமைப்புகளும் இனைந்து எதிர்த்து போரிடவேண்டும் ---
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று -
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

No comments:

Post a Comment