Wednesday, August 12, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது  நெல்லை NFPE தொழிற்சங்க அலுவலகத்திற்கு இன்று(12.08.2020) விடுமுறை நாளிலும் தோழர்கள் வருகைபுரிந்தார்கள் .

தோழர் எஸ் முருகன் அவர்கள் சிறிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை அன்பளிப்பாக தந்துள்ளார்கள் .அதேபோல் தோழர் புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு ஒரு நெட் மோடம் கொடுத்துள்ளார்கள் .தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் .அதேபோல் நமது தோழர்களிடம் உள்ள தொழிற்சங்க சம்பந்தமான புத்தகங்கள் இலாகா விதிகள் அடங்கிய புத்தகங்கள் இருப்பின் நமது அலுவலகத்திற்கு தர விரும்பினால் தாராளமாக தரலாம் ..மேலும் பல தோழர்கள் /தோழியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்ன செய்யவேண்டும் என கேட்கிறார்கள்நமது அடுத்த இலக்கு நமது அலுவலகத்திற்கு பிரிண்ட்ருடன் ஒரு சிஸ்டம் வாங்கவேண்டும் என்பதுதான் .நேற்றுவரை ரூபாய் 12000 வரை நம்மிடம் பிரிந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் -புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



No comments:

Post a Comment