Friday, February 11, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                       எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற தோழமை சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .தேர்ச்சி பெற்றும் போதுமான Vacancy இல்லாமல் எழுத்தர் வாய்ப்பை இழந்த தோழர்கள் அடுத்துவரும் தேர்வில் தேர்ச்சிபெற உங்களையும் வாழ்த்துகிறோம் 

            .2018 க்கு முன்பெல்லாம்  தேவைக்கு குறைவான ஊழியர்கள் தேர்ச்சி பெற்ற வரலாறுகள்  உண்டு ..Vacancy என்பதும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு என்றெல்லாம் வந்ததுண்டு ....இல்லை VACANCY  இல்லை என நிர்வாகம் அறிவித்தபோதிலும் VACANCY களை கண்டுபிடித்து இமாலய சாதனையை படைத்தது நமது பேரியக்கம் ஆம் நமது NFPE பேரியக்கம் எடுத்திட்ட தொடர் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் எழுத்தர் தேர்விற்க்கான எண்ணிக்கைகள் பெருமளவில் உயர தொடங்கின ..CADER சீரமைப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோட்டங்களில் எழுத்தர் பதவிகள் உயர்ந்தன ..எழுத்தர் பதவிகள் உயர உயர எழுத்தர் தேர்வில் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்கின்ற அடிப்படையில் நமது NFPE அஞ்சல் மூன்று தமிழ்மாநில சங்கம் எடுத்திட்ட மாபெரும் முயற்சியால் அன்புத்தலைவர் அண்ணன் KVS மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இலாகா தேர்விற்க்கான பயிற்சி வகுப்புகள் இன்று பெருமளவிற்கு கைகொடுக்க எந்த கோட்டத்திலும் VACANCY க்கு குறைவான தேர்ச்சி இல்லாமல் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றிருப்பது நமது NFPE பேரியக்கம் காட்டிய வழிகாட்டுதல்கள் என்பது மிகையாகாது .தேர்ச்சி பெற்ற அனைவரையும் மீண்டும் NELLAI --NFPE வாழ்த்துகிறது ..அஞ்சல் மூன்று சங்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறது வாருங்கள் ---வாழ்த்துக்கள் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

No comments:

Post a Comment