Saturday, April 18, 2015

NFPE சார்பாக ஊதிய குழுவிடம் நேரடி சாட்சியம் 

             PAY BAND --GRADE PAY முறை ஓழிக்கபடுமா ?

26.30.2015 அன்று ஊதிய குழு தலைவர் நீதியரசர் AK மாத்தூர் முன்பு NFPE சம்மேளனம் சார்பாக சுமார் 2.30 மணி நேரம் நேரடி சாட்சியம் வழங்கப்பட்டது .இலாகா ஊழியர்களின் சார்பில் அஞ்சல் துறையின் பல்வேறு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மேலும் உயர்ந்த நிலையில் பொருத்த வேண்டிய நியாயத்தை தலைவர்கள்   எடுத்துரைத்தனர் .ஊதிய பேண்ட் ,மற்றும் கிரே டு ஊதிய முறையால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விளக்கினர் .ஊதியக்குழுவின் தலைவரும் இம்முறையை நீக்கிவிட்டு மீண்டும் ஒவ்வொரு கேடருக்கும்  ,தனித்தனியான  ஊதிய விகிதங்களை கொண்டுவருவதை சாதகமாக பரிசீலிப்பதாக   குறிப்பிட்டார் .MACP உயர்வுகளில் அஞ்சல் துறை ஊழியர்களின் பிரத்தியேக பிரட்சினையான இலாகா தேர்வில் தேறி பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு மூன்று MACP உயர்வுகள் மறுக்கப்படும் முரண்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்க பட்டது 

                                                             வாழ்த்துக்களுடன் 
                                                             ஜேக்கப்ராஜ் 

                                                                 

No comments:

Post a Comment