...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 27, 2017

                                       முக்கிய செய்திகள் 
சென்னையில் இன்று கேசுவல் லேபர் கோரிக்கைகளுக்காக நடக்கும் உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும் .மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து மறுத்து வரும் சூழலில் போராட்டம் ஆர்ப்பாட்டம் ஊர்வலம் மனிதசங்கிலி என இயக்கத்தை சோர்வில்லாமல் நடத்தும் தோழர் M .கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறும் போராட்டம் வெல்லட்டும் .
------------நண்பர் பார்த்திபன் இல்ல திருமண வரவேற்பு வாழ்த்துக்கள் !
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V. பார்த்திபன் அவர்களின் புதல்வன் மணமகன் திரு. P. உதயசங்கர்- மணமகள் குமாரி. P. அர்ச்சனா அவர்களின் திருமண வரவேற்பு இன்று ( 25.6.17) சென்னை ராமாபுரம் MGR தோட்டம் ஜீவன் ஜோதி மகாலில் சிறப்பாக நடைபெற்றது .
பல்வேறு அரசியல கட்சிகளின் பிரமுகர்கள், மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள் , தமிழகமெங்கிருந்தும் அஞ்சல் தொழிற்சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துத் தெரிவித்தனர்.
வரவேற்பு நிகழ்வில் அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS , அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் மற்றும் அகில இந்தியத் தலைவர் தோழர் J.R., அஞ்சல் மூன்று அகில இந்திய உதவிப் பொதுச் செயலரும் தமிழ் மாநில நிதிச் செயலருமான தோழர் வீரமணி,அஞ்சல் மூன்று மாநில உதவித் தலைவர் செங்கை தோழர். G. இராமமூர்த்தி,நெல்லை கோட்ட உதவி செயலர் C .வண்ணமுத்து   மத்திய சென்னை முன்னாள் கோட்டச் செயலர் தோழர். D.இரவி, மு.தலைவர் தோழர்.R. தேவேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .தமிழகம் முழுவதும் இருந்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் --------------

0 comments:

Post a Comment