...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 30, 2019

                                                     திருமண வாழ்த்துக்கள் 
நமது அன்பிற்குரிய ஆலோசகர் மறைந்த தலைவர் பேச்சிமுத்து அவர்களின் பேரனும் NFPE பேரியக்கத்தின் முன்னணி தலைவர் மறைந்த தோழர் டால்வி போஸ்ட்மேன் பாளை அவர்களின் புதல்வர்
                       D.சாய் முத்துக்குமார் -M .பசுமதி இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று VM.சத்திரம் ஸ்ரீனிவாசம ஹாலில்  நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் எழுத்தராக பணியாற்றி இன்று ASST.ACCOUNTS OFFICER ஆக பதவியுயர்வு பெற்று சென்றிருக்கும் தோழர் 
விக்னேஸ்வரன் -சந்திரலேகா இவர்களது திருமணம் 01.12.2019 அன்று பழவூரில் நடைபெறுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------
தேனி கோட்ட முன்னாள் அஞ்சல் மூன்றின் கோட்டசெயலர் நண்பர் செல்லத்துரை அவர்களின் புதல்வி இந்துமதி -முத்துக்குமார் இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று ஆண்டிபட்டியில் நடைபெறுகிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------
இல்லறம் எனும் இன்ப சோலையில் இணையும் தம்பதியர்கள் அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

                  அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மதுரா மாநகரில் (உத்தரபிரதேசம் )நடைபெற்ற 11 வது NFPE சம்மேளனக்குழு 
               நமது NFPE சம்மேளனத்தின் உட்சமட்ட அமைப்பான சம்மேளன குழு கூட்டம் (FEDERAL COUNCIL ) கடந்த 25.11.2019 முதல் 27.11.2019 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது ..சம்மேளனத்தின் தலைவராக தோழர் PV.ராஜேந்திரன்( R 3 கேரளா ) மாபொதுச்செயலராக மீண்டும் தோழர் RN .பராசர் (பொதுச்செயலர் P 3 UP )  நிதிச்செயலராக தோழர் அஸ்வின்குமார் (P 4 டெல்லி ) அகியோர்களுக்கு ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்கள் .உதவி பொதுச்செயலராக நமது அஞ்சல் மூன்றின் தமிழ்மாநில உதவி செயலரும் வேலுர் கோட்ட செயலருமான அன்புத்தோழர் வீரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .அகிலஇந்திய அளவில் மீண்டும் நமது தமிழக அஞ்சல் மூன்றின் ஆளுமை நிருபிக்கப்பட்டுள்ளதுஅகிலஇந்தியஅளவில் தொடர்ந்து தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS மற்றும் நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் JR அவர்களுக்கும்  NELLAI NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .சம்மேளன அளவில் தமிழகத்தின் ஒற்றை பிரதிநிதியாக வலம்வரும் நண்பர் வீரன் அவர்களின் பணிசிறக்கவும் வாழ்த்துக்களை NELLAI NFPE சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் .இறுதியாக தமிழகத்தின் சார்பாக NFPE சம்மேளன செயல்தலைவராக பணியாற்றிய அன்பு அண்ணன் விருத்தாச்சலம் மனோகரன் அவர்களுக்கும் உதவி பொதுச்செயலர் தோழர் ரகுபதி அவர்களுக்கும் பாராட்டி கௌ ரவிக்கப்பட்டது .







                 

Friday, November 29, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 வணக்கம் .நேற்று நடைபெற்ற நமது SSP அவர்களுடன் நடைபெற்ற மாதாந்திர பேட்டி குறித்து தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன் .வழக்கம்போலவே இந்த பேட்டியும் சுமார் 1 மணி 45 நிமிடங்கள்( மதியம் 12 முதல் 13.45 )வரை நடைபெற்றது .முன்னதாக நமது மாதாந்திர பேட்டியில் கொடுக்கப்பட்ட பிரச்சினைக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நமது SSP அவர்களே தொலைபேசியில் ஓரிரு தினங்களுக்கு முன் இந்த பிரச்சினையை குறித்து பேசி தீர்த்துவைப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தையும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் கிடைத்த அடுத்தநாளே கோட்ட அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி SSP அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம் ..   
       பேட்டியில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்
1.காசாளர் பதவிகள் உள்ள அனைத்து SO களிலும் காசாளர் பதவிகள் விரைந்து நிரப்பிட விண்ணப்பங்கள் கோரப்படும் .
2.RULE 38 யின் கீழ் நமது  கோட்டத்திற்கு வரவேண்டிய ஊழியர்கள் குறித்து அந்தந்த கோட்டங்களுக்குதொடர்புகொள்ளப்பட்டதாகவும் நாகப்பட்டினம் தவிர மற்ற கோட்டங்களில் இருந்து ஊழியர்கள் RELIEF செய்யப்படுகிறார்கள் .முதற்கட்டமாக கோவில்பட்டி கோட்டத்தில் இருந்து தோழர்கள் வருகிற 30.11.2019 அன்று RELIEF செய்யப்படுகிறார்கள் .அதற்கான உத்தரவு கோவில்பட்டியில் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது 
3.தோழர் துளசிராமன் வருகிற 01.12.2019 அன்று களக்காடு அலுவலகத்தில் இருந்து RELIVE செய்யப்படுவார்கள் (கோவில்பட்டியில் இருந்து தோழியர் இசக்கியம்மாள்
 (SPM மாவடி )30.11.2019 அன்று RELIEF செய்திடும் உத்தரவும் உறுதிசெய்யப்பட்டது
.4.LSG பதவியுயர்வை அமுல்படுத்தும் முன் காலியாகவுள்ள அனைத்து இடங்கள் குறித்த அறிவிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படும் .(எல்லா LSG PA பதவிகள் உள்பட )
5.மகேந்திரகிரி நெட்ஒர்க் குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்
6.PTC க்கு பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு இலாகாவின் சமீபத்திய உத்தரவுப்படி முழு  பயணப்படி  வழங்குவது குறித்து ஊழியர்களுக்கு விளக்க சுற்றறிக்கை வெளியி டப்படும் .இதனடிப்படையில் தோழர் ஆசைத்தம்பி அவர்களின் பயணப்படி மறுபரீசீலிக்கப்படும் .
7.TBOP பதவியுயர்விற்கு   பயிற்சி நாட்களை சேவைக்காலத்தோடு சேர்ப்பதில் விடுபட்ட தோழர்கள் அனைவரின் பெயரும் அடுத்தகமிட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்
8.பாளையம்கோட்டைக்கு 85 KV ஜெனெரேட்டர் வழங்க மண்டல அலுவலகத்தில் இருந்து மாநில அலுவகத்திற்கு நிதி ஒதுக்கீடு கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
9.பாளையம்கோட்டையில் தோழியர்களுக்கு தனியாக REST ROOM தற்காலிகமாக  காலியாகவுள்ள போஸ்ட்மாஸ்டர் குடியிருப்பில் பயன்படுத்திக்கொள்ள நேற்றே அனுமதிக்கப்பட்டது .
10. ஜம்மு-காஸ்மீரு க்கு  .LTC யில் சென்ற ஊழியர்களுக்கு பிடித்தம்செய்யப்பட்ட தொகை DOPT யின் சமீபத்திய உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் வழங்கப்படும் .
11..தோழர் நாராயணன் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய சிறப்பு விடுப்பு (பணியின் போது ஏற்பட்ட விபத்து )குறித்து புதிய விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பிடவும் அதன்பேரில் முடிவெடுக்கவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
12.நமது கோட்டத்தில் சிலநேரத்தில் சில உபகோட்ட அதிகாரிகளின் பேச்சுகள் ஊழியர்களுக்கு  மனஉளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைள் குறித்து விவாதிக்கப்பட்டது .சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தக்க அறிவுறுத்தல் கோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது ..இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்பதை நாமும் நம்புகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, November 27, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                   நமதுநெல்லை  கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திரப்பேட்டி 28.11..2019 நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது .
நமது ஊழியர்கள் தரப்பு சார்பாக அஞ்சல் மூன்றில் 
தோழர்கள் T .அழகுமுத்து (கோட்ட தலைவர் ) SK .ஜேக்கப் ராஜ் மற்றும் அம்பை கிளை செயலர் தோழர் RV.தியாகராஜபாண்டியன் அஞ்சல் நான்கின் சார்பாக கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா இளைய தோழர் C .மகேந்திரன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக விவாதிக் கவிருக்கின்ற பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                             TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 21.11.2019
To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
                                                *****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.
1. The benefit the enhancement of cash handling allowance has not been reaped by the deserving officials due to delay in filling up of Treasurer posts of Sub offices  by D.O.  Request immediate action.

2. For the benefit of the officials who now promoted to LSG under cadre restructuring, it is requested to circulate the details of vacant LSG posts.

3.  To set right the network connectivity issue at Mahendragiri SO, it is requested to take action to change the link from Vadakkankulam Telephone Exchange to Panagudi Exchange.

4. Request transfer of BOs from Mahendragiri SO to nearby SOs considering various aspects affecting the functioning of the office.

5. Request replacement of UPS batteries supplied on 06.01.2016 to Tachanallur SO as the same were exhausted.

6. Request passing of TA bills of officials deputed to PTC Training allowing full DA.  Claims passed with wrong interpretation needs to be reopened.

7. Request replacement of toner of laser printer provided to Ukkirankottai SO.

8. Request replacement of laser printer provided to I.C Pettai SO.

9. Request to carry out the maintenance work of Gangaikondan for which quotation was already forwarded to D.O

10. Request to issue orders for monetary benefits under TBOP scheme for the remaining officials (for example S.Vijayarani ,S.DevaRani ,S.Pappa etc...)

11. Request Supply of 85 KV Genset to Palayankottai HO
:
 12. Request to provide writing desk to customers of Sankar Nagar SO.

13  Request to send reply for the correspondence made to the Divisions .

14. Request to pass the LTC bills kept in pending on the light of DOPT instructions dated 02.10.2019 as an one time measure.
               
                                                    PENDING SUBJECTS

1.Request to relief of Sri.G.Thulasi Raman LSG PA Nanguneri (item 81)
2.Request to provide an additional hand to T.Karunkulam  (item 82)
3.Request to take action of dequarterize Vijayanarayanan  (item 83)
4.Request to change the cash office and mail office for Ittamozhi SO From vallioor to Tisaiyanvilai(item 92)
5.Request to deploy a GDS to CPC Tirunelveli 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் &SK .பாட்சா 
கோட்ட செயலர்கள் நெல்லை 

                     


அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
                        39 வது தமிழ் மாநில மாநாடு --கோவை 
நமது தமிழ் மாநில சங்கத்தின் 39 வது தமிழ்மாநில மாநாடு வருகிற பெப்ருவரி 9-11 வரை மூன்று நாட்கள் கோவை மாநகரில் நடைபெறுகிறது .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் நமது கோட்ட செயலரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
ரயிலில் முன்பதிவு செய்யவேண்டியதிருப்பதால் வருகின்றதோழர்கள் ரயில் கட்டணம்  ரூபாய் 600 மட்டும் 
POSB 0072773482 என்ற  கணக்கில்(JACOBRAJ ) செலுத்திவிட்டு தகவல்களை தெரிவிக்கவும் .டிசம்பர் 3 ம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் 
--------------------------------------------------------------------------------------------------------------
2002-2003 ஆண்டுக்கான இடங்களில் 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கான பழைய பென்ஷன் வழங்குவது குறித்து நேற்று வெளியான செய்தி -பழைய செய்தி .இதுகுறித்து நமது வழக்கறிஞர் திரு மலைச்சாமி Msc BL அவர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது கீழ்கண்டதகவல்களை  அவர்கள் தெரிவித்தார்கள் :" துளசிதாஸ் வழக்கில் அப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டதுஅதேபோல் மற்றொரு வழக்கில்(தமிழ்நாடு) மூன்று வருடம் gr.d +Gds    service  க்கு  பென்ஷன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது." 
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் 


                                    

Tuesday, November 26, 2019

                                                             முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                          தமிழக அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீர்களுக்கான 
செலேச்டசன் அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி அஞ்சல் எழுத்தர் /சார்ட்டிங் அசிஸ்டன்ட் 89 தபால்காரர் 65 மற்றும் MTS 77 என மிகப்பெரிய ஆளெடுப்பு நடைபெறுகிறது .விண்ணப்பிக்க கட்டணங்கள் செலுத்தவேண்டிய கடைசி தேதி 28.12.2019 .இதை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களுக்கு பதவிஉயர்வின் போது வழங்கப்பட்ட 3%  ஊதிய உயர்வினை ரத்துசெய்வதாக அஞ்சல் வாரியம் தனது 21.11.2019 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது .முன்னதாக 15.10.2018 உத்தரவில் பதவி உயர்வின் போது 3% FITMENT  சலுகை அஞ்சல் ஆய்வாளர்களுக்கு வழங்கியதை போல் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் MACP பெற்றிருந்தாலும் இந்த பயன் உண்டு என்று கூறப்பட்டிருந்தது ..கொடுத்ததை பிடிப்பதும் /பறிப்பதும் முறையானதா ? 
--------------------------------------------------------------------------------------------------------------------
                                                 இந்திய அரசியல் சாசன நாள் 
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம்  முதல் முறையாக ] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, November 25, 2019

                                         முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                          \              மத்திய அமைச்சரவை முடிவுகள் 
கடந்த (20-11-2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 5 பொதுத்துறை நிறுவனங்களை,Shipping Corporation of India, Tehri Hydro Development Corporation (THDC),
North Eastern Electric Power Corporation Limited (NEEPCO), Container Corporation of India தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம் 
அது மட்டுமல்ல, அலைக்கற்றை(Spectrum)வாங்கிய வகையில், Airtel, Vodaphone, Reliance Jio,போன்ற நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, செலுத்த வேண்டிய 42000கோடி ரூபாய்க்கு, மேலும் இரண்டு வருடங்கள்(2020-21--2021-2022) அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது!
------------------------------------------------------------------------------------------------------------------------
                                                       வருந்துகிறோம் 
தோழர் சங்கரலிங்கம் தபால்காரர் பாளையம்கோட்டை (ஓய்வு ) அவர்கள் நேற்று 24.11.2019 அன்று பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமானார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு 25.11.2019 காலை நடைபெறுகிறது .தோழரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .
------------------------------------------------------------------------------------------------------------------------

SSA கணக்குகள் இதுவரை 1.55 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன .நமது அமைச்சர் பெருமிதம் 

Friday, November 22, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
  நவம்பர் 24 நமது சம்மேளன நாள் குறித்த சுற்றறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள் .அதே நவம்பர் 24 நெல்லையில் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த நாள் .ஆம் 1993 நவம்பர் 24 ம் தேதி தான் நமது இயக்கத்தின் மற்றுமொரு தலைவர் நண்பர் வண்ணமுத்து அவர்களின் திருமனம் நடைபெற்றது .நான் 1991 யில் பாளையம்கோட்டையில் கிளை செயலராக தலைவர் வெங்கட்ராமன் மற்றும் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களின் தயவில் பொறுப்பேற்றேன் .1992 யில் நெல்லையை உலுக்கிய மாபெரும் தல மட்ட போராட்ட வெற்றியின் விளைவாக அன்றைய நமது தமிழ்மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் கடைக்கண் பார்வையில் நெல்லையில் எண்ணற்ற இளைய தோழர்கள் அணி திரண்டோம் .அதில் முக்கியமான தளபதிகளில் ஒருவர் தான் நண்பர் வண்ணமுத்து .தோழர் வண்ணமுத்து திருமணம் நமது சம்மேளன தினமான 24.11.2003 யில் திருச்செந்தூரில் நடைபெற்றது .அண்ணன் பாலு  அவர்கள் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்  அன்றுமாலை திருச்செந்தூரில் நடைபெற்ற சம்மேளன தின  கூட்டத்தில் அண்ணன் பாலுவோடு நெல்லை தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தோம் இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவுற்றாலும் இன்றளவும் தோழமையும் தொடர்பும்  பசுமையாகவே இருக்கின்றன .இதோ சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 





                                                    முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !  வணக்கம் .
                                 ஜனவரி 8- 2020 ஒருநாள் வேலைநிறுத்தம் 


CONFEDERATION NATIONAL SECRETARIAT CALLS UPON ENTIRE CENTRAL GOVERNMENT EMPLOYEES
TO MOBILISE AND PARTICIPATE IN THE
2020 JANUARY 8th NATIONWIDE STRIKE
ORGANISE MASS DHARNA AND DEMONSTRATIONS AND RALLIES
AT ALL IMPORTANT CENTRES AND STATE/DISTRICT/
DIVISIONAL HEADQUARTERS ON 20
th DECEMBER, 2019.
*        Strike to be organised on 10 points Charter of demands of Confederation (attached herewith) and also the common demands of workers adopted in the National Convention of Workers.
*        First and most important demand to be emphasized is “SCRAP NPS AND RESTORE OPS”.-
-----------------------------------------------------------------------------
மத்தியஅரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை நேரிடையாக எந்த மேல்மட்ட அமைப்புகளுக்கும் அனுப்பக்கூடாது .அனைத்து முறையீடுகளும் உரிய வழியான Immediate Superior அல்லது Head of office அல்லது  Competent Authority மூலம் தான் அனுப்பிடவேண்டும் .அதே போல் சர்வீஸ் மேட்டர் களுக்கு வெளி ஆள் சிபாரிசு செய்வதும் ஒழுங்குநடவடிக்கைக்கு ஏதுவாகும் என  No.CDN/ MF.CGA/ CPGRAM/ 2019/ 378Ministry of FinanceDepartment of Expenditure,Controller General of Accounts மீண்டும் வலியுறுத்தியுள்ளது 
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாதம் 28.11.2019 அன்று நடைபெறவிருக்கும் நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் T.அழகுமுத்து (கோட்ட தலைவர் ) SK .ஜேக்கப் ராஜ்  மற்றும் R.தியாகராஜபாண்டியன் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா C .மகேந்திரன் (டவுண் ) மற்றும் தங்கராஜ் ஆகியோர்களும் கலந்துகொள்கிறார்கள் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



-
--------------

Wednesday, November 20, 2019

                                                முக்கிய செய்திகள் 
அஞ்சலகங்களில் கவுன்டர் வேலைநேரத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து CPMG களுக்கும் அஞ்சல் வாரியம் அவர்களது கருத்தினை கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது .ஏற்கனவே நாம் வாரம் ஐந்து நாட்கள் என போராடி கொண்டிருக்கும் வேலையில் தினமும் 1 மணிநேர வேலைகளை கூடுதலாக பார்க்கும் திட்டத்தை நாம் அனுமதிக்கக்கூடாது .
1.ஏற்கனவே IT MODERNIZATION என்ற பெயரில் பழுதான  கணினிகள் மோசமான நெட்ஒர்க் கடுமையான ஆட்பற்றாக்குறை என 2012 முதல் நமது ஊழியர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் ஏராளம் .இதுவரை இந்தப்பிரச்சினைகளில் இலாகா எந்த தீர்வையையும் காணாததால் ஊழியர்கள் சராசரியாக 10 மணிநேரம் வேலைசெய்துவருகிறார்கள் .இந்த சூழ்நிலையில் இந்த வேலை நேரநீட்டிப்பு நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்று .
2.தற்போதைய திட்டப்படி SB பிரிவில் 6 மணிநேரம் MPCM பிரிவில் 7 மணிநேரம் என்றால் அதன்பிறகு பல்வேறு ரிப்போர்ட் எடுத்து கணக்குகளை முடிக்க ஏறக்குறைய SB மற்றும் MPCM பிரிவிற்கும் எந்த வேறுபாடு இல்லாமல் போகும் .இது நமது அடிப்படை சட்டங்களை தகர்ப்பது போலாகும் .
3.உணவு இடைவேளைக்கு 30 நிமிடம் அதுவும் பணி பாதிக்காமல் தொடர்ந்து கவுன்ட்டர் செயல்படவேண்டும் என்றால் தனியாளாக நிர்வகிக்கும் அலுவலகங்களின் நிலை என்ன ?
4.முதலில் நமது கோரிக்கையான OPERATIVE அலுவலகங்களுக்கு 5 நாள் வேலைநேரமாக மாற்றிய பிறகு இந்த வேலைநேர நீடிப்பை பரிசீலிக்கலாம் .
            இது ஒடிசா மாநில செயலர் தோழர்  சமால் அவர்கள் நமது மத்திய சங்கத்திற்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம் .
ஒரு கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது .
                                          ஒருவன் பட்டுத்துணிக்கு 
                                           கனவு கொண்டிருக்க --அவனது 
                                           இடுப்பு துணியும் 
                                          களவாடபட்டது 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                 முக்கிய செய்திகள் 
33 வருடம் சேவை அல்லது 60 வயதில் ஓய்வு என்ற திட்டம் ஏதும் இல்லை என்று DOPT அமைச்சம் விளக்கியுள்ளது .
Department of Personnel and Training has clarified thatno proposal to reduce superannuation age of central govt employees .
--------------------------------------------------------------------------
நமது திருநெல்வேலி CGHS மருத்துவமனையில் உறுப்பினராக நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ .மீட்டர் என்ற வரம்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது .அதன்படி பின்கோடு 627001-627009 யில் உள்ள ஊர்கள் மற்றும் தச்சநல்லூர் முன்னீர் பள்ளம் வரை CGHS எல்கைக்குள் வருகிறது 
----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஆண்டிற்கானவிதி  38 யின் கீழ் கொடுக்கப்படும் இடமாறுதல்  உத்தரவுகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பிறப்பிக்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------------------
*தபால்காரர் /MTS பணிகளில் OFFICIATING பார்க்கும் GDS ஊழியர்களுக்கு அனைத்து விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் உண்டு (விடுமுறைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் அவர்கள் பணியில் இருக்கவேண்டும் ) ஆகவே இந்தமாத EL /CL பில் அனுப்பும்பொழுது இதை கணக்கில் கொண்டு செயல்பட HO மற்றும் SAS கள் கவனத்தில் கொண்டு செயல்படவும் .
-----------------------------------------------------------------------------------------------------------
 PTC பயிற்சிக்கு செல்லும் ஊழியர்களுக்கு போர்டிங் & லாட்ஜிங்  கொடுத்தாலும் அவர்களுக்கு DAILY ALLOWANCE வழங்கலாம் என்ற 01.02.2018  MINISTRY OF EXPENDITURE உத்தரவை அனைவருக்கும் விரிவு  படுத்தவேண்டும் என நமது கோட்ட சங்கம் கோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது 
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, November 19, 2019

                                                   முக்கிய செய்திகள் 
*புதிய MTS நியமண விதிகள் அஞ்சல் வாரியத்தால் 15.11.2019 அன்று வெளியி டப்பட்டுள்ளது  .அதன்படி கேசுவல் லேபர்ஸ் மற்றும் GDS ஊழியர்களுக்கு 10 வகுப்பு கல்வித்தகுதி என்பது கிடையாது .அதேபோல் GDS ஊழியர்களுக்கு வயது உச்சவரம்பும் கிடையாது 
*ஓய்வூதியர் சங்க அறிவிப்பு 
அன்பார்ந்த ஓய்வூதியர்களே , இது நவம்பர் மாதம். நாம் வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) கொடுக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் சென்னை தணிக்கை அலுவலகத்தில் போடப்படுவதால் , தலமை அஞ்சலகங்களில் இருந்து தணிக்கை அலுவலகத்திற்கு , ஓய்வூதியர்களின் விபரங்களை ஒவ்வொரு மாதமும்
20 ந்தேதி அனுப்பி விடுகின்றனர். எனவே நாமும் நவம்பர் 20-ம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் தலைமை அஞ்சலகத்துக்கு கிடைக்கும் படி , வாழ்நாள் சான்றிதழ் இதுவரை தராதவர்கள் உடனே கொடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                       தோழர்  கோமதி நாயகம்  APMA/CS  அம்பத்தூர் அவர்களின் தன் விருப்ப ஓய்வு --21.11.2019 -நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது 

 கோமதிநாயகம் எனும்
 கொள்கை குன்றே !
 தன்விருப்ப ஓய்வு எனும்
உன் விருப்பத்தை நீயுமா  தேர்தெடுத்தாய் ?

அம்பையில் இருந்தாலும்
அம்பத்தூரில் இருந்தாலும்
நெல்லையில் உனக்கென
நிரந்தர இடம் இன்னும் நிரப்படாமலே ......

இலாகா பணியிலும் -நம்
இயக்க பணியிலும் ஒருசேர
பயணித்தவன் நீ --

எங்கள் ஐயங்களுக்கு
வினாக்களுக்கும் அவ்வப்போது
பதிலளித்தவன் நீ !

வயது வேறுபாடு ஏதுமின்றி
எங்களோடு பல நாட்கள்
பயணித்தவன் நீ !

கேடர் வித்தியாசம் ஏதுமின்றி
கேட்பவர்கள் அனைவருக்கும்
பலனளித்தவன் நீ !

சாஸ்திரங்களை கற்று அறிந்திருந்த போதிலும் 
கணக்கு சூத்திரங்களை பத்திரமாய் 
பாதுகாத்தவன் நீ !

இறுக்கமாக இருப்பதுபோல் தெரியும்
நெருக்கமாக நம் அணியில் இருந்ததை
பக்குவமாய் பார்த்துக்கொண்டவன்  நீ !

ஆதாரம் இருந்தால் மட்டுமே 
அதிகாரிகளோடு வாதாடுவாய் !அதிலும் 
சேதாரம் இல்லாமல் நடந்து கொண்டவன் நீ !

உன் பணிநிறைவு நாட்கள் சிறக்க
வாழ்த்தி மகிழ்கின்றோம் ..

     என்றும் அன்புடன் ----SK .ஜேக்கப் ராஜ் -----











           

Monday, November 18, 2019

                                        முக்கிய செய்திகள் 
* நமது தென்மண்டல அஞ்சல் துறை தலைவருடனான இருமாதந்திர பேட்டி வருகிற 20.11.2019 அன்று மதுரையில் நடைபெறுகிறது .
*தபால்காரர்களுக்கான சீருடை அலவன்ஸ் ரூபாய் 10000 என்பதை  Department  of expenditure நிராகரித்தநிலையில் மீண்டும் அஞ்சல் வாரியம் சார்பாக ரூபாய் 8500 ஆக உயர்த்திட  திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது .
-*LGO தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளிவரும் .
 *இந்த மாத மாதாந்திர பேட்டிக்கு சுப்ஜெக்ட்ஸ் அனுப்பிட விரும்புவோர் 19.11.2019 குள் அனுப்பிவைத்திட மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்-SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, November 16, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
           அஞ்சல் மூன்றின் 39 வது தமிழ்மாநில மாநாடு -பெப்ரவரி 9 -11 
இடம் --கோவை 
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் 39வது மாநில மாநாடு எதிர்வரும் 2020 பிப்ரவரித் திங்கள் 9, 10, 11 தேதிகளில் கோவை பேரூர் மெயின் ரோடு தெலுங்குப் பாளையம் பிரிவில் அமைந்துள்ள துர்கா மகாலில் நடத்தப்பட தீர்மானிக்கப் பட்டுள்ளது. 
இதற்கான வரவேற்புக் குழு கோவை கோட்ட அனைத்து 
NFPE உறுப்புச் சங்கங்களையும் மற்றும் AIPRPA ஓய்வூதியர் சங்கத்தினையும்  இணைத்தும், உடன்  மண்டல அளவிலான அஞ்சல் மூன்று   கோட்ட/கிளைச் செயலர்களை உள்ளடக்கியும் அமைத்திட தீர்மானித்து, 
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலரும் அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிச் செயலருமான தோழர். A.வீரமணி அவர்கள் முன்னிலையேற்று நடத்தி வைத்தார். 
மேலும் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்தியத் தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தோழர். J.இராமமூர்த்தி, நமது அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர் தோழர்.N.  சுப்பிரமணியன், சம்மேளன முன்னாள் செயல் தலைவர் தோழர்.C.சந்திரசேகர், அஞ்சல் மூன்றின் முனனாள் மேற்கு மண்டலச் செயலர் தோழர். கண்ணன், கோவை அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலரும், முன்னாள் மாநில உதவித் தலைவருமான தோழர். D.எபினேசர் காந்தி,  AIPRPA சங்கத்தின் உள்ளிட்ட பல நிர்வாகிகள், முன்னணித் தோழர்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்திடும் வண்ணம் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்கள். 
இறுதியாக மாநாட்டினை சிறப்பாக நடத்திட அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய வரவேற்புக் குழுவானது அமைக்கப்பட்டு மாநிலச் செயலரால் அறிவிக்கப் பட்டது. இதன்படி
மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் :
மாண்புமிகு
S.P. வேலுமணி, M.A., B.L., அவர்கள்
(தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் )
பொது ஒருங்கிணைப்பாளர்: 
தோழர்.D. எபினேசர் காந்தி அவர்கள்
பொதுச் செயலர்:
தோழர். N. சிவசண்முகம் அவர்கள்
நிதிச் செயலர். தோழியர். G.கீதப்பிரியா
அவர்கள்
உள்ளிட்ட இதர நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர்.
இது தவிர மேடை சேவை, போக்குவரத்து, உணவு , தங்குமிடம், மகளிர் சேவை, விளம்பரம்-ஊடகத் தொடர்பு, 
மேடை அலங்காரம், அவசர உதவி, 
மருத்துவ உதவி, தொழில்நுட்பக்குழு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள அனைத்து பகுதி தோழர்களையும் உள்ளடக்கி கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 
 இதன் முழு விபரங்கள் மற்றும் இதர விபரங்கள் வரவேற்புக்குழுவால் தனது முதல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும்.
       நமது கோட்டத்தில் இருந்து  மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
            மகிளா கமிட்டி சார்பாக மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழியர்களுக்கு விசேஷ ஏற்பாடுகள் 
செய்யப்பட்டுள்ளது .தோழியர்களுக்காக நடைபெறும் சிறப்பு அமர்வில் (ஒருநாள் ) நமது முன்னணி தோழியர்களும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
  கோவைக்கும் -நெல்லைக்கும் உள்ள உறவு இன்று நேற்றல்ல அண்ணன் VS அவர்கள் காலத்திலே உருவாக்கப்பட்டது .இன்றுவரை இந்த உறவுகள் அண்ணன் காந்தி உள்ளிட்ட தோழர்களின் வழிகாட்டுதலில் தொடர்கிறது .இது நமது மாநாடு என்கின்ற உணர்வில் முழு ஒத்துழைப்பை வழங்கிடுவோம் .
மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைய நெல்லை NFPE வாழ்த்துகிறது 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                           முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                 *திருச்சி மண்டலத்தில்  LSG ஊழியர்களுக்கு கோட்ட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் 33 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்ற நிலையில் LSG காலியிடங்கள் 22 தான் உள்ளது என்பது குறிப்பிப்பிடத்தக்கது 
                                 * திருநெல்வேலி PSD க்கு இரண்டு OA பதவிகளுக்கு விருப்பமனுக்கள் பெற்றுள்ள நிலையில் அதை நிரப்பும் அதிகாரம் மண்டல அலுவலகத்திற்கு தான் உள்ளதாம் .ஆகவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மண்டலஅலுவலக்திற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும் .
                                  *புதுவணிகத்திற்கு target நிர்ணயம் செய்து GDS ஊழியர்களை மிரட்டல் போக்கை நிறுத்திட வேண்டியும், திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, மயிலாடுதுறை, விருத்தாசலம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய கோட்டங்களை எடுத்துக்காட்டாக காட்டி GDS சங்கம் சார்பாக இலாகா விற்கு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது 
                           *திருப்பத்தூர் கோட்டத்தில் Review Meeting    என்று கூறி GDS  
ஊழியர் களை வரவழைத்து கேவலமாக பேசிய கோட்ட
கண்காணிப்பாளர் மற்றும் கோவை மண்டல  அதிகாரி ஜெயராஜ்பாபு 
அவர்களின் அத்து மீறிய பேச்சை கண்டித்தும்,
GDS  களைமிகவும் கேவலமான வார்த்தைகளால்திட்டியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நெல்லையிலும் ஒரு உபகோட்டத்தில்  இந்த பிரச்சுனை விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் .அத்துமீறி பேசுவது வேலைபார்க்க முடியாவிட்டால் வீட்டுக்குப்போ என்பதெல்லாம் தொடர்ந்தால் நாமும் போராட்ட பாதையில் செல்ல வேண்டிய சூழல் வரும் .
                           *இன்று ஆய்வாளர்கள் தேர்வு எழுதும் எமது சொந்தங்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                            *RULE 38 மூலம் தனது சொந்தஊருக்கு (திருச்சி )செல்லும் தோழர் பரஞ்ஜோதி போஸ்ட்மேன் பாளையம்கோட்டை அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                          நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, November 15, 2019

அன்பார்ந்த தோழர்களே !
             GDS TO MTS தேர்விற்கு நமது நெல்லையில் பயிற்சி வகுப்புகள் வருகிற 18.11.2019 முதல் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது .ஆர்வமுள்ள தோழர்கள் நமது முன்னாள் ASP ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்களை தொடர்புகொள்ளலாம் 9442149339
இடம் -சமாதானபுரம் பாளை 
----------------------------------------------------------------------------------------------------------------------
LGO தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளிவரும் என்று சென்னை செய்திகள் தெரிவிக்கின்றன 
----------------------------------------------------------------------------------------------------------
தபால்கார்களுக்கான RULE 38 இடமாறுதல்களும் CPMG அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டதாக அறிகிறோம் .
நெல்லை கோட்டத்திற்கு INWARD 2 இருப்பதாக தெரிகிறது 
விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் 
-----------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்மாஸ்டர் கேடர் இணைப்பு எதிரொலியாக பழைய A கிளாஸ் அலுவலகங்கள் LSG ஆக தகுதி இறக்கம் செய்ய படுகின்றன .
முந்தைய போஸ்ட்மாஸ்டர் கிரேடு 1 அலுவலகங்கள் HSG II ஆக தகுதி உயர்த்தப்படுகின்றன .தற்சமயம் PM கிரேடு I  ஊழியர்களுக்கு ஒரு LSG பதவியை தற்காலிகமாக அடையாளம் காட்டப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .அதற்குள் அவர்களுக்கு HSG II பட்டியல் வரவேண்டும் என்பதே நமது விருப்பம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு ஓர் அவசர வேண்டுகோள் !
 நெட் ஒர்க் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவதிப்படும் மகேந்திரகிரி அஞ்சலக பிரச்சினையை  தீர்த்திட போர்க்கால நடவடிக்கையினை எடுத்திடுவீர் ! மன உளைச்சலில் இருந்து மகேந்திரகிரி ஊழியர்களை காத்தீடுவீர் !

NFPE
         ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                                         TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3- dlgs dated at Palayankottai- 627002 the 15.11.2019

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

Sub: Network Problem at Mahendragiri SO - reg.

We regret to bring to your kind notice that the network connectivity issue prevailed at Mahendragiri SO since last three days is not set righted upto this time which creates public and other customers unrest. The SPM has to cut a sorry figure before the customers for the no fault of him.

Practically no work is carried out due to network issue.  Further it is seen that the network is being maintained via Vadakkankulam Telephone Exchange whereas Panagudi Exchange is the nearest one.

Hence it is requested to check the issue on this aspect also and take expedite action to restore network connectivity at Mahendragiri SO.
                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]







Wednesday, November 13, 2019

                                                  முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                    வணக்கம் .நமது கோட்ட அளவிலான SSP அவர்களுடன் மாதமொருமுறை  நடத்தப்படும் மாதாந்திர பேட்டி வருகிற 28.11.2019 அன்று நடைபெறுவதை நீங்கள் அறீவீர்கள் .இதில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் இருப்பின் விரைந்து கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் .
  *1986 க்கு முன்பு PA INDUCTION பயிற்சி காலத்தை TBOP /BCR பதவியுயர்வின் கணக்கீட்டிற்கு எடுக்கப்பட்ட விசயத்தில் பல ஊழியர்களின் பெயர் விடுபட்டுள்ளது .அந்த தோழர்கள் /தோழியர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு உடனே முறையீடு செய்ய கேட்டுக்கொள்கிறோம் .அதன் மாதிரி கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .இதற்கான காரணம் அவர்களது பயிற்சி க்கான உத்தரவின் நகல் கோட்ட அலுவலகத்தில் இல்லையாம் .
இதை சரி செய்யவேண்டியது நிர்வாகத்தின் கடமையே தவிர ஊழியர்களின் தவறல்ல....
----------------------------------------------------------------------------------------------------------------------
Sub: Request to include the period of PA Induction Training for financial upgration under TBOP - reg 
Ref : D.O Lr No. BI/TBOP/BCR dated 28.10.2019
A kind reference is invited to the above.  I submit that I had undergone PA Induction Training at PTC Madurai for the period of 90 days from......... to ..........
But it is seen that my name has been omitted in the memo under reference.  Hence, I would request you to consider this representation and advance the date TBOP issued as the instructions issued by the Directorate. 
My training details are also available in my Service Book.
Thanking you 

Yours faithfully
----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                              

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 இந்த மாத கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 28.11.2019 அன்று  நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் பழையபிரச்சினைகளில் தீர்வு எட்டப்படாதவை இவைகளை கோட்ட சங்கத்திற்கு 19.11.2019 குள் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா 

 அன்பார்ந்த தோழர்களே !
            MACP தொடர்பான முக்கிய தகவல்களின் தொகுப்பு ..
                             

OM/Order/Circular Title
Reference No
Date