...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 3, 2017

நெல்லை தபால் மருத்துவமணையில் மீண்டும் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் V.விஜயகுமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்
பொலிவிழந்த மருத்துவமனை புனரமைக்க படட்டும் --பயனாளிகளின் எண்ணிக்கை உயரட்டும் 
                  தபால் மருத்துவமனையை சிறப்புடன் நடத்த உறுதி 
நெல்லை கோட்ட அஞ்சல் ஊழியர்களின் மனங்களிலும் மனைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் DR.விஜயகுமார் அவர்கள் .பணிமாற்றல் காரணமாக திருச்சிக்கு மாற்றப்பட்ட பின் நெல்லை மருத்துவமனை களையிழந்து காணப்பட்டது பலபேர் மருத்துவமனைக்கு வருவதை நிறுத்தினர் -அனேக பென்ஷன்தாரர்கள் மருத்துவமனை வேண்டாம் என FMA க்கு மாறினர் .இந்நிலையில் மீண்டும் மருத்துவர் விஜயகுமார் நெல்லைக்கு பொறுப்பேற்றிருப்பது ஊழியர்களின் மத்தியில் புது மகிழ்ச்சியை தந்திருக்கிறது .ஆகவே மருத்துவமனையை சுற்றி 8 KM குள் பணியாற்றும் தோழர்கள் அனைவரும் தங்களுக்கு உறுப்பினர் அட்டையை பெற்று கொள்ள வேண்டுகிறோம் .பென்சனர்கள் உயர்த்தப்பட்ட FMA வை கணக்கில் வைத்து கொண்டு மருத்துவமனையை தவிர்க்காதீர்கள்;.மேலும் வெளியிடங்களில் பணிபுரிந்தாலும் 8 KM குள் குடியிருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த மருத்துவ வசதியை பெற தகுதி உள்ளவர்கள் .பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் அதிகரிக்கும் .
இது குறித்து மேலும் தகவல்கள் பெற விரும்புவோர் நம் அன்பிற்கினிய தோழர் குத்தாலிங்கம் எழுத்தர் மருத்துவமனை அவர்களை அணுகலாம் 
நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச்  செயல் 
என்ற குறளுக்கு இலக்கணமாக திகழும் மருத்துவர் விஜயகுமார் அவர்களின் மருத்துவ சேவை சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
                                                தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                                 SK .பாட்சா
கோட்ட செயலர் P3                                                          கோட்ட செயலர் P4           

0 comments:

Post a Comment