...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 23, 2019

                  அகிலஇந்திய அளவில்  ஊழியர்களின் ஒட்டுமொத்த அங்கீகாரம் பெற்றது நமது NFPE  மட்டுமே !  
அஞ்சல் துறையில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகார தேர்தல் முடிவுகளை அஞ்சல் வாரியம் நேற்று பல்வேறு நிர்பந்தங்களுக்கு இடையே வெளியிட்டது .அதன்படி 
நமது NFPE சங்கம் மீண்டும் அகிலஇந்திய அளவில் முதலிடத்தை பெற்றது . FNPO சங்கமும் தனது அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது .BPEF சங்கத்திற்கு எழுத்தர் மற்றும் தபால்காரர் சங்கம் என எதிலும் தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் ஆதரவு பெறாததால் BPEF சங்கம் தனது அங்கீகாரத்தை இழக்கிறது .
                     புதிய தொழிற்சங்க அங்கீகார விதிப்படி 2015 யில் நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பின் முடிவுகளை அஞ்சல் வாரியம் வெளியிட இருந்த தடைகள் முற்றிலுமாக விலக்கப்பட்டதன்பின்னணியில் அஞ்சல் வாரியம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது .
                   தமிழகம் தந்திட்ட மகத்தான வெற்றி -நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை போல் அஞ்சல் ஊழியர்களும் தீர்க்கமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர் .
தமிழகத்தில் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு 
 பெற்ற ஆதரவை பாரீர் !
மொத்த எழுத்தர்கள் --                     9040 
NFPE-P3  பெற்ற வாக்குகள் ---------6721    
FNPO P3  பெற்ற வாக்குகள் -------- 1824    
BPEA P3  பெற்ற வாக்குகள்-------        94   

தபால்காரர் & MTS அஞ்சல்நான்கு 
மொத்தஉறுப்பினர்கள்  --             6136
NFPE-P4  பெற்ற வாக்குகள் ---------3770
FNPO P4பெற்ற வாக்குகள் --------    1371
BPEA  P4  பெற்ற வாக்குகள்-------      105
         இனி வருங்காலங்களில் இந்த வெற்றி பயணம் தொடர்வதற்கு உங்களின் ஆதரவை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .உறுப்பினர் சேர்ப்பில் கோட்ட சங்கத்தோடு இனைந்து பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

  


0 comments:

Post a Comment