...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*இலாகா தேர்வுகள் அனைத்தும் மண்டல அளவில் ஒரே மையத்தில் நடத்திடவேண்டும் என்பது இலாகாவின் புதியவிதி .காரணம் கோட்ட அளவில் நடைபெறும் போது முறைகேடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலாகா நமது சங்கஙக்ளுக்கு விளக்கம் அளித்துள்ளது .ஆனால் தற்சமயம் ஒரே மையத்தில் நடத்தப்படவில்லை .கடந்த தேர்வு கூட மதுரையில் மூன்று மையங்களில் நடைபெற்றது .புதிய நியமண விதிகளின் படி 150 பேருக்கு ஒருமையம் என்று கூறப்படுகிறது .இன்றைய தேதியில் மதுரை தேர்விற்கு செல்ல கன்னியாகுமரியில் இருந்து செல்ல குறைந்தபட்சம் 6 மணிநேரம் நெல்லையில் இருந்துசெல்ல 4 மணிநேரம் பயணிக்கவேண்டியுள்ளது .குறைந்தபட்சம் குமரி நெல்லை தூத்துக்குடி கோட்டங்களை இணைத்து ஒரு தேர்வு மையத்தை ஏற்படுத்திதர வேண்டும் என நமது மாநில சங்கத்தின்மூலம் அகிலஇந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுவோம் .இந்த முறை GDS TO POSTMAN தேர்வுக்கு மதுரைக்கு செல்லும் ஊழியர்களுக்காக நமது கோட்ட சங்கம் சார்பாக தனி வாகனம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது .இதுவரை 8 GDS ஊழியர்கள் தங்கள் வருகையை உறுதிசெய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்பும் GDS தோழர்கள் இருந்தால் நமது SPM தோழர்கள் தங்கள் அலுவலக GDS ஊழியர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்து வருகிற 07.01.2021 குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment