...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நமது கோட்ட சங்க பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல /மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்கின்ற மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மட்டும் மூன்று கடிதங்கள் நமது கோட்ட பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்ட கடிதங்களை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .

*நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இடமாறுதல்கள் தந்திட்ட கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெற்று செல்கின்ற அனைத்து தோழர்களையும் /தோழியர்களையும் NELLAI NFPE வாழ்த்துகிறது ..LSG இடமாறுதல்களினால் ஏற்பட்டிற்குக்கும் இடங்களுக்கு உடனே T/S ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என் நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து கேட்டுள்ளோம் .இன்று அதற்கான உத்தரவுகள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .

*நமது கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் JAB .மேரி PA மேலப்பாளையம் அவர்க்ளின் கணவர் திரு .கிறிஸ்டோபர் (இந்தியன் வங்கி) அவர்க்ளின் இசை பயணத்தை ஆதரிப்போம் .அவர்களின்  இசையினை கேட்க  

https://www.youtube.com/channel/UCWhEYsNhbuWHNKH3xSLCalw என்ற YOUTUBE சேனலுக்கு SUBSCRIBE செய்து ஆதரவு தந்திடுவோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, November 2, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

*நமது கோட்டத்தின் புதிய SSP ஆக (கூடுதல் பொறுப்பு ) திரு .K .லட்சுமணன் SSPOS மதுரை அவர்கள் கடந்த 29.10.2020 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்கள் .அவர்களை மீண்டும் NELLAI NFPE சார்பாக வாழ்த்திவரவேற்கிறோம் .

*இன்று நமது கோட்டத்திற்கு தென்மண்டல இயக்குனர் அவர்கள் வருகை தருகிறார்கள் .

*LSG RE-ALLOTMENT கிடைத்த ஊழியர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் இன்று வெளியாகிறது .விருப்பம் தெரிவிக்காத இரண்டு ஊழியர்களை தவிர அனைவருக்கும் அவர்களின் விருப்ப இடங்களில் ஒன்று கிடைத்திருக்கிறது 

*நமது நெல்லை கோட்டத்தில் ஓய்வூதியர்களின் தாய் அமைப்பான நமது தொழிற்சங்க ஆசான் திரு .M.பேச்சிமுத்து அவர்கள் நடத்திவந்த மத்தியஅரசு ஓய்வூதியர்கள் சங்கம் நேற்று தேசிய அஞ்சல் RMS ஓய்வூதியர் முன்னணி என்ற அமைப்போடு இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட இயக்கமாக செயல்பட தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான ஒன்று .வெளியில் இருந்தோ அல்லது மேலோட்டமாக பார்த்தால்  ஏதோஇருக்கின்ற சங்கத்தை உடைத்துவிட்டார்களோ என எண்ண தோன்றும் அதுவல்ல உண்மை .ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன் உடைக்கப்பட்ட சங்கத்தை நாம் மீண்டும் இணைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்  அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நிச்சயம் ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நாங்களும் துணைநிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த  ஓய்வூதியர்களே ! வணக்கம் .

நெல்லை கோட்ட தேசிய அஞ்சல்  ஆர் .எம் .எஸ் ஓய்வூதியர்கள் முன்னனி (NATIONAL FRONT OF POSTAL RMS  PENSIONERS ) துவக்கம் .

அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பஒய்வூதியர்க்ளுக்கான NFPRP எனும் புதிய அமைப்பு நேற்று நெல்லையில் தொடங்கப்பட்டது .இந்த அமைப்பு ஏதோ புதிய அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்பிற்கோ போட்டியாக துவங்கப்பட்டதல்ல .ஏற்கனவே நெல்லையில் நம்முடைய ஆசான் தோழர் M .பேச்சிமுத்து அவர்கள் தலைமையில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கமான மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு நம்மோடு இணைக்கப்பட்டு அனைவரையும் ஒரு குடையின் கீழ் அரசியல் கேடர் வேறுபாடுகளைக்கடந்து தொழிற்சங்கத்தில் அணிசாரா கொள்கையான நடுநிலையாளர்களின் கொள்கைவழி நடக்கின்ற பேரமைப்பாகும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .நேற்றைய துவக்க நாளிலே பெருமைப்பாண்மை தோழர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

                                        NELLAI NFPRP புதிய நிர்வாகிகள் 

தலைவர் .தோழர் A.ஆதிமூலம் 

உதவி தலைவர்கள் -A.ராமசுந்தரம் (RMS)-O.மூக்கையா -R.நடராஜன் M.கலிய பெருமாள் E.சுப்ரமணியன் (RMS) I.மகாராஜன் 

கன்வீனர் --KG.குருசாமி (PRIP ---RETD )

துணைகன்வீனர்கள்  -T.சுடலையாண்டி A.அமிர்தராஜ் -S .நமச்சிவாயம் (RMS)

பொருளாளர் -SK .பாட்சா 

உதவி பொருளாளர் -A.அந்தோணி 

நிர்வாக குழு உறுப்பினர்கள் -S.முருகன் V.சீனிவாசன் M.அந்தோணி சாமி E.மாணிக்க வாசகம் (RMS) PK .சுடலைக்கண்ணு A.பிரான்சிஸ் சேவியர் A.நீல்வின் M.பேச்சியப்பன் 

மகிளா கமிட்டி -கன்வீனர் -கிரேஸ் எலிசபெத் 

தலைமை ஆலோசகர் -தோழர் SN .சுப்பையா (RMS)

கவுரவ ஆலோசகர்கள் -தோழர்கள் S.சௌந்தரபாண்டியன் T.வெங்கட்ராமன் S.முத்துகிருஷ்ணன் 

                                                             தீர்மானங்கள் 

1.நெல்லை கோட்டத்தின் ஒருங்கினைந்த மாநாடு வருகிற ஜனவரியில் நடத்துவது 

2.மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது 

3.ஓய்வூதியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் /LTC வசதிகள் அறிமுகப்படுத்தவேண்டும் 

4.ஓய்வூதியர்கள் /குடும்ப ஓய்வூதியர்களை CGHS திட்டத்தில் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது 

5.நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சபடியை உடனே வழங்கிட வேண்டும் 

6..ஓய்வுபெற்ற தபால்காரர்கள் பிரச்சினைகளான 3050 அடிப்படை ஊதியத்தில் இன்னும் நிலுவைத்தொகை கிடைக்காதவர்களுக்காக மீண்டும் இயக்கங்களை நடத்துவது -அதேபோல் ஓய்வுபெற்ற GDS ஊழியர்களுக்கும் 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட பணிக்கொடையினை விரைந்து வழங்கிட முயற்சிகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிககவனம் கொண்டு மேற்கொண்டு எங்களோடு ஒத்துழைக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் KG.குருசாமி  கன்வீனர் NFPRP-நெல்லை