...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 15, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                                           முக்கிய செய்திகள் 

*ஊரடங்கின் தளர்வினை தொடர்ந்து அஞ்சலகங்களில் வேலைநேரத்தை மீண்டும் பழைய நிலைக்கு அமுல்படுத்திட மாநில அஞ்சல் நிர்வாகம் 14.06.2021 அன்று உத்தரவிட்டுள்ளது .மேலும் ரோஸ்டர் முறை தொடர வேண்டுமா ?என்கின்ற கருத்தையும் 16.06.2021 குள் அனுப்பிட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

*BSNL நெட் கிடைக்காத இடங்களில் 4G DEVICE பயன்படுத்திட அஞ்சல் வாரியம் அனுமதியளித்துள்ளது .முதல்கட்டமாக நாடுமுழுவதும் 3000 DEVICEயும் அதில் தமிழகத்தில் 1611 க்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

*எழுத்தர் பிரிவுகளை தொடர்ந்து தபால்காரர் &MTS பிரிவிற்கான SPORTS QUOTA  தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மாநில நிர்வாகத்தால் வெளிவந்துள்ளது .நமது கோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழியர் மதுபாலா (MTS) அவர்களுக்கு வாழ்த்துக்கள் .மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் தான் SPORTS QUOTA  நியமனங்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

*முடக்கப்பட்ட பஞ்சப்படி குறித்து விவாதிக்க நேஷனல் JCM  ஊழியர் தரப்பு , அரசு பணியாளர்கள் மற்றும் நிதி அமைச்சக செயலாளர்களுடன் வருகிற 26.06.2021 அன்று சந்தித்து பேசுகின்றனர் .

*கருணை அடிப்படையில் இறந்த GDS ஊழியர்களுக்கு பணி விரைந்து வழங்கிடும் ஆயத்த நடவடிக்கைகள்  மாநில நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது .அதன்படி அந்தந்த உபகோட்டங்கள் வாயிலாக வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை விண்பிக்காதவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டுவருகிறது .நமது தோழர்கள் தங்கள் பகுதியில் பணியின் போது இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த செய்தியினை கொண்டு சேர்க்கும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .

                                     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்  நெல்லை 

Thursday, June 10, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                  உதவிய உ(ள்ள )ங்களுக்கு  நன்றி ! நன்றி !--சிலமணிநேரத்தில் ரூபாய் 17000 --- அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி நன்றி 

திருவண்ணாமலை கோட்ட எழுத்தர் தோழர் திரு .முகமது ஷெரிப்  அவர்களின் கொரானா பாதிப்பு அதனை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புஞ்சை நோயினால் பார்வையை இழக்கக்கூடிய கட்டத்தில் அவரது கண்களை அகற்றிட நடக்கும் அவசர சிகிச்சைக்கு உடனடியாக தேவைபடும் ரூபாய் 8 லட்சம் தொகைக்காக உதவிக்கரம் நீட்டிட நமது  மாநிலச்சங்க  வாட்ஸாப்ப் குழுவில் பதியப்பட்ட வேண்டுகோளை தொடர்ந்து நமது கோட்ட வாட்ஸாப்ப் குழுவில் இளந்தோழர் மகாராஜன் OA  கோட்ட அலுவலகம் அவர்களால் பதியப்பட்ட செய்தியை பார்த்து தானாக முன்வந்து நன்கொடைகளை வழங்கிய நமது அன்பு சொந்தங்களுக்கு NELLAI -NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..செய்தி பதியப்பட்ட   சிலமணிநேரத்தில் ரூபாய் 17000 நமது கோட்ட  சங்க உறுப்பினர்களால் அனுப்பப்பட்டுள்ளது என்பதனை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறோம்  இதுவரை ...1.தோழர் மகாராஜன் OA --1000 2. தோழியர் ஹேனா SPM மூன்றடைப்பு -1000 3.தோழியர் ஆரோக்கிய வளர்மதி  DY POSTMASTER பாளை --1000 4.தோழர் A.சுப்ர மணியன் DSM பாளை --1000 5.தோழியர் S.விஜயராணி SPM குலவனிகர் புரம் --1000  6.தோழர் S.வள்ளி நாயகம் SPM சுத்தமல்லி -1000 7.தோழியர் தனுஜா OA -1000 தோழியர் 8.உஷா தேவி PA மானுர் -1000 9.தோழியர் அருணாரணி PA டவுண் -1000 10.தோழியர் துர்கா PA பாளை -1000  11.தோழியர் அனுராதா SPM பர்கிட்மாநகரம் --1000 12.தோழியர் செல்லம்மாள் LSGPA திசையன்விளை --1000 13.தோழர் SK .ஜேக்கப் ராஜ் LSGPA பாளை -1000 14.தோழியர் விஜயலட்சுமி LSGPA பேட்டை -1000 15.தோழர் ஜஹாங்கிர் PA TVLHO -1000 16.தோழியர் ஜெயலட்சுமி PA TVLHO  -1000 17.தோழியர் சுபா SPM ராஜவல்லிபுரம் -1000...தொடரட்டும் நமது சேவைகள் -உதவி என்பது சொல் அல்ல -செயல்    தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Tuesday, June 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

கோவிட்  பெருந்தொற்று காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின்  விடுப்பு  நாட்களை எவ்வாறு ஒழுகுபடுத்தலாம் என்ற முந்தைய ஆணைக்கு புதிய விளக்கத்தை DOPT &TRG 07.06.2021 தேதியன்று வெளியிட்டுள்ளது .அதன் சாராம்சத்தை உங்கள் பார்வைக்கு தருகிறோம் 

a ) அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதிசெய்ய பட்டநிலையில் அவர் அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்தால் ......

(i )  அவருக்கு 20 நாட்கள் COMMUTTED  விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் 

(ii )COMMUTEED  விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் 

b )அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் ஆனபின் அவர் மருத்துவமனையில் இருந்தால் 

(i)அவருக்கு 20 நாட்கள் COMMUTTED விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் ) 

(ii )COMMUTTED விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் .

(III) 20 நாட்களுக்கு பிறகும் விடுப்புதேவைப்பட்டால் எஞ்சியுள்ள நாட்களுக்கு COMMUTTED விடுப்பு வழங்கலாம் 

C ) குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிட் பாசிட்டிவ்என்றால் 

(i) 15 நாட்கள் சிறப்பு விடுப்பு  வழங்கலாம் .

(ii  தொற்று ஏற்பட்டவருடன் நேரடி தொடர்பில்  இருந்திருந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

d )  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Containment Zone ) வசிப்பவராக இருந்தால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து  அந்தப்பகுதி  விலக்கி கொள்ளும் வரை  வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

இந்த  உத்தரவு முதலாம் ஊரடங்கு பிறப்பித்த 25.03.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை  பொருந்தும் .இது பழைய காலங்களில் வேறு விடுப்புகள் வழங்கியிருந்தாலும் ஊழியருக்கு பயன்பெறும் வகையில் மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எடுத்த EXOL நாட்கள் சேவைக்காலத்திற்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் .

இந்த உத்தரவினை தொடர்ந்து நமது இலாகா உத்தரவினை வெளிட்டபிறகு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட விடுப்பினை தங்களுக்கு பயனுள்ள விடுப்பாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் .இதுகுறித்து உதவிகள் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்  நெல்லை