...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 7, 2018

அன்பார்ந்த தோழர்களே !
  16 நாள் GDS போராட்டம் வரலாற்று வெற்றி ! இந்த புனித போரில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE இன் புரட்சிகர வாழ்த்துக்கள் .
                                                 வேலைநிறுத்த சிறப்புகள் 
1.இந்திய சுதந்திரத்திற்கு பின் முதன்முதலாக அதிக நாள் மத்திய அரசு துறையில் வேலைநிறுத்தம் நடந்தது இப்பொழுது தான் .
2. போராட்டத்தின் நடுவிலே அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிசயமும் இங்குதான் .
3.BJP சர்க்காரின் நான்காண்டு ஆட்சிக்காலத்தில் போராட்டத்தின் மூலம் கோரிக்கையை தீர்வு கண்டதும் இன்று தான் .
4.2012 யில் ஏற்பட்ட சங்கங்களின் பிளவிற்கு பிறகு AIGDSU -NFPE (GDS) சங்கங்கள் சம்மேளனங்களின் துணை இல்லாமல் அவர்களாகவே JCA அமைத்து போராடியது மட்டுமல்ல இறுதிவரை ஒற்றுமை எனும் கவசத்தை இறுக பற்றிக்கொண்டதும் சிறப்புதான் .
               நமது கோட்டத்தில் GDS தோழர்களுக்கு ஆதரவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு தோழர்கள் /தோழியர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது நெல்லை கோட்டசங்கத்தின் வாட்ஸாப்ப் ஆன நெல்லை NFPE தளத்தில் இளைய தோழர்கள் /தோழியர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை மிக ஆர்வமாக கருத்துக்களை பதிவதும் தங்கள் பிரச்சினைகளை தெரிவிப்பதும் நாளுக்குநாள் அதிகரிப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் .தொடர்ந்து உங்கள் ஆதரவுகளை கோட்ட சங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் தந்திடுமாறு கேட்டு கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
CSI பயிற்சி வகுப்புகளிலும் தோழர் /தோழியர்கள் காட்டும் ஆர்வம் மிக சிறப்பாக இருக்கிறது .நிச்சயம் கோட்ட சங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் .
 நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, June 6, 2018

                                      வெற்றி வாழ்த்துக்கள் 
                                    அதிகார பூர்வ அறிவிப்பு 
கமேலேஷ் சந்திரா கமிட்டி அமுலாக்கத்திற்கு இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது .செய் ! அல்லது செத்துமடி என்று சாதித்து காட்டிய GDS தோழர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள் .
01.1.2016 முதல் ஊதியம் மாற்றப்படுகிறது .நிலுவை தொகை ஒரே தவணையில் கிடைக்கும் .போனஸ் உச்சவரம்பு ரூபாய் 7000 ..இன்னும் விரிவான தகவல்களுடன் விரைவில் .......
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா -I .ஞான பாலசிங் E .காசி விஸ்வநாதன் நெல்லை கூட்டு போராட்ட குழு 

                                                  முக்கிய செய்திகள்
GDS கோரிக்கைகளுக்கு ஆதரவாக NFPE மற்றும் FNPO சார்பாக ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ஜூன் 7 ;8; 11 ;12 ; 13ஆகிய  நாட்களில் ஒவ்வொரு மாநில CPMG அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது 
இரண்டாவது கட்டமாக டெல்லி டாக் பவன் முன்பு அகிலஇந்திய நிர்வாகிகள் 18.06.2018 மற்றும் 19.06.2018 இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது .மேலும் கோட்ட மட்டங்களிலும் தலமட்டத்தில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்க அறைகூவல் வந்துள்ளது .நமது கோட்டத்தை பொறுத்தவரை CSI அமுலாக்கத்தை முன்னிட்டு விடுப்பு கிடைப்பதில் சிரமங்கள் இருப்ப  தால் இன்று NFPE ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்து பேசி சூழ்நிலைக்கேற்ற இயக்கங்களை நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் .
-------------------------------------------------------------------------------------------------------------------
CSI குறித்த பயிற்சி வகுப்புகள் 10.06.2018 அன்று திருநெல்வேலி HO வில் நடத்த உத்தேசதிக்க பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள் .நேற்று பல தோழர் /தோழியர்கள் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்கள் .ஊழியர்களின் எண்ணிக்கையை பொறுத்து விரிவான தயாரிப்புகளை செய்ய கோட்ட சங்கம் தயாராக இருக்கிறது .விருப்பமுள்ளவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்த கேட்டு கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
CSI க்கு முன்னதாக அனைத்து அலுவலகங்களில் உள்ள உட்கட்டமைப்புகளை சரி செய்ய கேட்டிருந்தோம் .கோட்ட நிர்வாகமும் அனைத்து C கிளாஸ் அலுவலகத்தில் உள்ள UPS பேட்டரிகளை வாரம் நான்கு அலுவலகம் வீதம் மாற்றி கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்திருந்தது .கோட்ட சங்க கவனத்திற்கு வந்த அலுவலகங்களுக்கு தேவைகள் குறித்து நிர்வாகத்திற்கு கடிதமும் கொடுத்து விவாதிக்கப்பட்டுள்ளது . நேற்று நமது கோட்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கும் CSI திருநெல்வேலி டிவிசன் வாட்ஸாப்ப் குரூப்பில் தோழர்கள் தங்கள் அலுவலக குறைகளை பதிவிட்டிருந்தது வரவேற்கத்தக்கது .இந்த தளத்தில் மண்டல அளவிலான அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் .ஆகவே நிச்சயம் நமது வேதனை வலிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாக செல்லும் .தயங்காமல் இந்த தளத்தை பயன்படுத்துங்கள் .
------------------------------------------------------------------------------------------------------------
--TA  CEA  உள்ளிட்ட அனைத்து BILL களும் அதிகஅளவில் PASS செய்யப்பட்டுள்ளது .
CSI கையேடு இன்னும் கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை அனுகவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை