...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 30, 2017

                                      நெல்லை கோட்ட  செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                  நேற்று 29.03.2017 நடைபெற்ற மாதாந்திர பேட்டி குறித்து சில தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் .
* பாளையம்கோட்டை மகளீர் புதிய டைனிங் அறைக்கு நாம் கேட்ட படி அனைத்து உபகரணங்களும் வழங்க  கொடுக்கபட்ட கொட்டேசன் ஒப்புக்கொள்ளப்பட்டது .ஏற்றுக்கொள்ளப்பட்டது .
*நெல்லை கோட்டத்திற்கு புதிதாக 68 பாஸ்புக் பிரிண்டர் வந்துள்ளது .இன்றுமுதல் அவைகள் SO களுக்கு அனுப்பப்படும் .
*புதிய கட்டிடத்திற்கு மாற்றலாகி செல்லும் நெல்லை டவுண் HSG I அலுவலகத்திற்கு ஊழியர்களின் விருப்பப்படியே அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன .
*பாளையம்கோட்டை சைக்கிள் ஷெட் விரிவாக்க பணி சிவில் பணியில் சேர்க்கப்பட்டு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளது .
*TR/ATR பதவிகளுக்கு பெறப்பட்ட விருப்ப விண்ணப்பங்கள் கேடர் சீரமைப்பு காரணத்தினால் ரத்து செய்ய படுகிறது 
* பஞ்சிங்  INCREMENT குறித்து  இன்று 30.03.2017  நல்ல முடிவு எடுக்க படும் .(நேற்று நேரமானதால் கோட்ட அலுவலக ஊழியர்களிடம் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெற முடியவில்லை  )
*MTS குறைக்கப்பட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக சேரன்மகாதேவி அலுவலகத்திற்கு  ஒரு GDS பேக்கர்  கொடுப்பதற்கான பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது .
*பொட்டல் புதூர்  GDS MD பதவி  உடேனே OUTSIDER மூலம் நிரப்பிட ASP அம்பைக்கு அறிவுறுத்த படும் .
*திருநெல்வேலி டெபுடேஷன் குறித்து நமது NFPE சங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பழைய நிலையே தொடரும் என்று உறுதி செய்யப்பட்டது .இந்த விஷயத்தில் ASP HOS அவர்கள் தான் யார் பெயரையும் குறிப்பிட்டு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் யிடம் தெரிவிக்கவில்லை என்று தெளிவு படுத்தினார் .
*ஒரு சங்கத்தின் நடைமுறை குறிப்புகளை காட்டி அலுவலகத்தை இயக்க முடியாது என்ற நமது வாதத்தை நிர்வாகம் ஏற்று கொண்டது .
*திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் குறித்த இலாகா பண முறைகேடு குறித்து கோட்ட சங்கம் சார்பாக எழுத்துப்பூர்வமான புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .அவர்மீது இலாகா விசாரணை வேண்டி வருகிற 04.04.2017 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் கடிதம் கொடுக்க பட்டுள்ளது .
(நேற்றைய பேட்டி மாலை 17.40 க்கு தொடங்கி இரவு 19.35 வரை நடந்தது) .
                                                     நன்றி 
                                                  தோழமை வாழ்த்துக்களுடன் 
                                                    SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

0 comments:

Post a Comment