...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 17, 2017

அன்பார்ந்த தோழர்களே !
          வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறது கேடர் சீரமைப்பு 
வரவேற்க்கவா ?வழியனுப்பவா ? 
 கேடர் சீரமைப்பு உத்தரவு படி எத்தனை PA  பதவிகள் LSG ஆக தரம் உயர்த்தப்படுகிறதோ அன்றைய நாளிலே அதாவது 15.04.2017 அன்றே அதே அளவிலான PA பதவிகள் ஒழிக்கப்படும் என்பது 27.05.2016 நாளிட்ட அஞ்சல் வாரிய உத்தரவு அதை அப்படியே ஏற்றுக்கொண்டு  தமிழகத்தில் முதன்முதலாக கோவைகோட்டத்தில் SSPOs memo No A-1/ Cadre Restructuring/LSG dated at Coimbatore 641001 the 11.04.2017 அன்று 77 LSG பதவிகள் உருவாக்கப்படுவதாகவும் 77 PA பதவிகள் ஒழிக்கப்படுவதாகும் உத்தரவு வந்துள்ளன .கோவையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரஇருக்கின்றன . மாநில அளவில் மட்டுமல்ல அகிலஇந்திய அளவில்  இது குறித்து வாத /பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன .இயக்குனரகம் இதில் தலையிட்டு ஊழியர்தரப்பு கோரும் மாற்றங்களை செய்யும் என்று நமது சங்கங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் -இயக்குனராக27.05.2016 உத்தரவை அமுல்படுத்த நமது மாநிலமும் படு வேகத்தில் இருப்பதாக அறிகிறோம் . இனி நமது பார்வை பதவி உயர்வினால் ஊழியர்கள் தொலைதூர இடமாறுதலுக்கு செல்வதை தவிர்க்கவும் --அவர்களின் விருப்ப அடிப்படையில் இடமாறுதல் கிடைக்கும் பட்சத்தில் பல மூத்த தோழர்களின் தன்விருப்ப ஓய்வு எனும் திட்டத்தை தடுக்க முடியும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் . இதனால் அகில இந்திய அளவில் 7851  PA பதவிகளை இழந்திருக்கும் வேலையில் இருப்பவர்களை தக்க வைத்தால் தான் ஆட்பற்றாக்குறை --பணிசுமைபோன்ற கொடுமைகளில் இருந்து ஊழியர்களை மீட்க முடியும் .
நிச்சயம் அந்த திசையில் நமது மாநிலச்சங்கம் பயணிக்கும் என்று நம்புகிறோம் .இதுகுறித்து மாநிலச்சங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம் .
                                 தோழமையுடன் S K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment