...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 30, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  தென்மண்டல தலைவர் அவர்களுடன் நடைபெற்ற இருமாதந்திர பேட்டி 29.08.2017 அன்று நடைபெற்றது .அஞ்சல் மூன்றின் சார்பாக நமது மாநில செயலர் தோழர் JR -ராமநாதபுரம் கோட்ட செயலர் தோழர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .பேட்டியை தொடர்ந்து அதே கூட்ட அரங்கிலேயே வந்திருந்த அனைத்து கோட்ட செயலர்களையும்
( கன்னியாகுமரி, நெல்லை,விருதுநகர் திண்டுக்கல் தேனி  பரமக்குடி )  உடனழைத்து கோட்ட வாரியான பிரச்சினைகளை விவாதிக்கப்பட்டது .உள்ளபடியே வந்திருந்த அனைத்து கோட்ட செயலர்களுக்கும் முழு திருப்தியை தந்தது .PMG அவர்களுடன் நமது இயக்குனர் அவர்களும் முழுமையாகா இருந்து கோட்ட செயலர்கள் தந்த கடிதங்களின் மேல் உடனடி குறிப்புகள் --உத்தரவுகளை -கொடுத்து கொண்டு வந்தார்கள் .சரியாக காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணிவரை தொடர்ந்தது .ஊழியர் பிரச்சினைகள் மேல் நமது PMG அவர்கள் கேட்டு அறியும் விதமும் --PMG அவர்களுக்கு துணையாக நமது DPS அவர்கள் காட்டிய ஆர்வமும் பாராட்டுதலுக்கு உரியது .நேற்றைய கூட்டத்தில் தீர்க்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் .
1.மதுரை PSD சம்பந்தமாக ஊழியர்தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் மீண்டும் ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்படும் .அதுவரை PSD இணைப்பு என்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இந்தக்குழுவில் PSD அஞ்சல்நான்கின் செயலர் தோழர் ஜெயராஜன் அவர்கள் இடம் பெறுகிறார் .
2.CSI ரோல்லவுட் தொடர்பாக விவாதிக்கையில் அணைத்து அலுவலகங்களிலும் பழைய கணினிகள் -பிரின்டர்கள் -UPS மாற்றுவதற்கான புதிய இன்டென்ட் இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .
3.தேங்கிக்கிடந்த அனைத்து MACP உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது .அடுத்த MACP (30.09.2017) கான உத்தரவுகள் நவம்பர் 30 குள் வெளிவரும் வகையில் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
4.LSG சம்பந்தமான இடமாறுதல்கள் குறித்த ஊழியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுசுமார்  22 ஊழியர்களுக்கான  உத்தரவுகள் 23.08.2017 அன்று வெளியிடப்பட்டது .
5.தோழர் சாகுல்( MMS திருநெல்வேலி ) அவர்களின் இடமாறுதலுக்கான உத்தரவுகள் நேற்று நம் நிர்வாகிகள் முன்னிலையிலே கோப்புகளை வரவழைத்து -உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட்து .இன்று உத்தரவு வெளிவரும் என்ற உறுதியை PMG அவர்கள் தந்தது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் ..
6.கன்னியாகுமரி கோட்டத்தில் இடப்பட்ட தவறான உத்தரவுகள் குறித்து சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் விளக்கம் கேட்டு தொலைபேசியிலும் -எழுத்துப்பூர்வமாகவும் வழிகாட்டுதல் குறிப்புகள்  கொடுக்கப்பட்டுள்ளது .
7.ஆலங்குளம் DE  QUARTARISE சம்பந்தமாக இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன .இந்த PROPOSAL என்று வந்ததோ அன்றிலிருந்து DEQUARTERS  ஆக்கப்படும் என்று நீண்ட விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
8.ACCOUNTS பிரிவில் தென்மண்டலத்தில் நான்கு தோழர்களுக்கு HSG II  பதவி உயர்வுகள் வந்துள்ளது .அவர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று .இடமாறுதல் பிறப்பிக்கப்படும் .
 விடுபட்ட இதர பிரச்சினைகள் குறித்து பேச மீண்டும் ஒருநாள் சிறப்பு பேட்டி வேண்டும் என்ற நமது மாநிலசெயலரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு -பாராளுமன்ற குழு விசிட் முடிந்தவுடன் ஒருநாள் INFORMAL மீட்டிங் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
ஒவ்வொரு கோரிக்கைகளை பேசும்போதும் நமது PMG அவர்கள்  காட்டிய ஆர்வமும் -அதை தீர்ப்பதற்கு உடனே இயக்குனர் அவர்களுக்கு கொடுத்த வழிக்காட்டுதல்களும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது .இதுபோன்ற உயர் அதிகாரிகள் எந்த அளவிற்கு ஊழியர்களின் பிரச்சினைகளைதீர்க்க மனிதாபிமானத்துடன் அணுகுகிறார்கள் என்பதனை   பார்த்தபிறகாவது கோட்ட மட்டங்களில் உள்ள ஒருசிலர் நிலைமையை உணர்ந்து தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் மட்டுமல்ல -வேண்டுகோளும் கூட .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------


0 comments:

Post a Comment