...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 8, 2018

                                      ஆர்ப்பாட்டம் -ஆர்ப்பாட்டம் 
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் 
நாள்    08.01.2018 திங்கள் 
நேரம் மாலை 6 மணி 
இடம்  பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 
தலைமை  தோழர்கள்   KG.குருசாமி & சீனிவாச சொக்கலிங்கம் 
அனைவரும் வாரீர் ! ஆதரவு தாரீர் !
நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதை நாம் அறிந்ததே
1அரசு துறை ஓட்டுனர்களுக்கு இணையான ஊதியம் 
2.பணிக்கொடையை உடனே வழங்கவேண்டும் 
3.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் 
4.சேவைநோக்கோடு செயல்படும் போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்கவேண்டும் என்பதே !
 கடந்த அக்டோபர் 2017 இல் ஏழாவது சம்பளக்குழு மாநிலஅரசுக்கு அமுல்படுத்தியதில் இருந்து இவர்களின் போராட்டம் தொடங்கியது .மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது .22 சுற்று பேச்சுவார்த்தை வீணானது .சம்பளம் பத்தாது என்றால் வேறுவேலைக்கு செல்லுங்கள் எனும் கேலி பேச்சுக்கள் -பணிக்கொடையை பல தவணைகளாக வாங்கிக்கொள்ள நீதிமன்ற உத்தரவு இவைகளை ஏற்கமுடியாது என தொழிலாளர்கள் போராடுகிறார்கள் .
                                  நீதி மன்றம் நிர்பந்திப்பது ஏன் ?
இதற்கு முன்பு செவிலியர் போராட்டம் -ஜாக்டோ ஜியோ போராட்டம் இன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இவைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் கணைகளை தொடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா ?
களத்தில் இருப்பது தொழிலாளி வர்க்கம் -அதை ஒடுக்க 
நினைப்பது அதிகார வர்க்கம் 
போராடும் தொழிலாளிக்கு ஆதரவாக புறப்பட்டு தோழா !
காத்துக்கிடக்கும் வரை நம் பெயரும் 
காற்று என்றே இருக்கட்டும் 
புறப்படும் பொழுது 
புயலென நிரூபிப்போம் !
                               போராட்ட வாழ்த்துக்களுடன் 
                          SK .ஜேக்கப் ராஜ்  SK பாட்சா 
குறிப்பு -ஆர்ப்பாட்ட முடிவில் GDS கமிட்டியின் இன்றைய நிலைகுறித்து உண்மை நிலவரங்கள் விளக்கப்படும் .

0 comments:

Post a Comment