...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 20, 2018

                    அன்பார்ந்த தோழர்களே !
அஞ்சல் துறையின் சமீபத்திய சவால்கள் பெரும்பாலும் அஞ்சல் எழுத்தர்கள் மட்டும் சந்தித்து வருகிறோம் .இது நமது தோழர்களின் 
சாமர்த்தியத்தினாலோ அல்லது சகிப்பு தன்மையினாலோ சமாளித்து வருகிறோம் .CBS அமுலாக்கம்  CR அறிமுகம் இன்று .CSI.
முந்தைய காலங்களை போலவே இந்தத்திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் அமுலாக்கத்திற்கு முன்பு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை செய்துதரவேண்டும் என்று வாதப்பிரதிவாதங்கள் நம்மிடையே வர தொடங்கியுள்ளன .

இது குறித்து மாநில சங்கத்தின் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
CSI Roll out என்பது ஏற்கனவே நமது துறை மூலம் முடிவெடுக்கப்பட்டு 
பல மாநிலங்களில் மூன்றாவது கட்டமாக அமலாவதாகவும், 
இது குறித்து துறை அமைச்சகம் வரை 
தொடர்பில் உள்ளதால் தன்னால் நிறுத்த முடியாது எனவும் , தன்னளவில் 
என்ன உதவி வேண்டுமானாலும் உடனே நிச்சயம் 
செய்து தருவதாவும்   நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது 
-----------------------------------------------------------------------------------------------------------------------
இது குறித்துசென்னை வடகோட்ட சங்கத்தின் பதிவு 
முதலில் தொழிற்சங்க ரீதியாக நாம் செய்ய வேண்டியது :
1. முதலில் அஞ்சல் இயக்குனரகத்திடம் CSI அமலாக்கத்தை உடனடியாக நிறுத்த சொல்ல வேண்டும்.
ஊழியர் தரப்புடன் கீழ்கண்ட தகவலுடன் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

i. Revenue earned before CSI implementation (Circle-wise)
ii. Revenue earned after CSI implementation (Circle-wise)
iii. Shortfall in revenue / Increase in revenue (Circle-wise)

இந்த முக்கிய தகவலுடன் ஊழியர் தரப்புடன் விவாதம் நடத்தாமல் CSI விரிவாக்கத்தை செய்ய கூடாது என்பதில் நாம் கறாராக இருக்க வேண்டும்
(இந்த தகவலை அலசினாலே CSI திட்டம் ஒரு தோல்வி திட்டம் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும். CSI Migration முற்றிலும் நிறுத்துவது குறித்து வாதாட நமக்கு மேலும்  scope கிடைக்கும். )
------------------------------------------------------------------------------------------------------------------------

இது ஈரோடு கோட்டத்தில் இருந்து 
#துறையின் வருவாய் இழப்பு
#துறை சார்ந்த முக்கிய  தகவல்களின்  பாதுகாப்பற்ற நிலை.
#SIFY போன்ற தனியார் ஒப்பந்தக்காரர்களால் நமது துறை வஞ்சிக்கப்படும் நிலை
#துறையில் உள்ள vacancies-ஜ நிரப்புவதில் வேகம் காட்டாமல்  outsourcing முறையை அதிவிரைவில் அமல்படுத்துவதில் நமது மத்திய அரசு காட்டி வரும் முனைவு..
---------------------------------------------------------------------------------------------------------------------
இது தூத்துக்குடி கோட்ட சங்கத்தின் பதிவு 
CSI-ல் இன்னும் அது network பிரச்சனையா?, Server பிரச்சனையா? Software பிரச்சனையா எனத் தெரியாமல், பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. எனவே, முழுமையாக சரி செய்த பின்பே அமுல்படுத்துவதே சரியாக இருக்கும்.  ஆனால், நம் விருப்பங்களும், வேண்டுகோள்களும், எச்சரிக்கைகளும் கவனிக்கப்பட போவதில்லை என்றாலும், இதை சொல்வது நம் கடமை.
-------------------------------------------------------------------------------------------------------------
 தோழர்களே !இது குறித்து உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன .என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்று இருந்திடப்போகிறோமா ? அமுலாக்கத்தை எதிர்கொண்டு அதிலிருந்து ஊழியர்களின் .
சிரமங்களை குறைக்க போகிறோமா ? கருத்துக்களை பகிருங்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment