...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 23, 2018

                                                   நன்றி நன்றி நன்றி 
நெல்லை அஞ்சல் மூன்றின் 44 வது கோட்ட மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது மாநில தலைவர் தோழர் M .செல்வ கிருஷ்ணன் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றிவைத்தார்கள் .முதல் நிகழ்ச்சியாக தோழர் புஷ்பாகரன் அவர்களின் புதல்வி செல்வி திவ்ய பாரதி அவர்களின் பரதநாட்டியம் தோழர் பரதன் அவர்களின் புதல்வர் கலைஞர் TV புகழ் தினேஷ் ராஜா அவர்களின் வரவேற்பு நடனம் திருமதி பாப்பா APM  அவர்களின் பேத்தி அவர்களின் பேச்சு மற்றும் மகிளா கமிட்டி சார்பாக குறுநாடகம் என ஆட்டம் பட்டம் என அமர்க்களமாய் தொடங்கியது நம் மாநாடு .மாநாட்டில் புதிய நிர்வாகிகள் அனைவரும் வழக்கம் போலவே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .தலைவராக தோழர் T .அழகுமுத்து செயல்தலைவராக தோழர் N .கண்ணன் செயலராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் நிதிச்செயலராக தோழர் G.சிவகுமார் அகியோர்களும் மகிளா கமிட்டி தலைவராக தோழியர் A.பசுமதி APM ACS கன்வீனராக தோழியர் S .முத்துபேட்சியம்மாள் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .அதன்பின் நடந்த பொது அரங்கில் தோழர் P.சேர்முக பாண்டியன் மாநிலத்தலைவர் தோழர் M.செல்வகிருஷ்ணன் மாநில உதவி தலைவர் தோழர் S.அய்யம் பெருமாள் மாநில டெக்னாலஜி பிரிவு உறுப்பினர் தோழர் P.சங்கர நாராயணன் தோழர் தியாகராஜ பாண்டியன்P3 செல்வபாரதி SBCO அம்பை  ஆதிநாராயணன் P4 அம்பை தூத்துக்குடி முன்னணி தோழர்கள் நாகலிங்கம் பொன்ராம் குமார் சங்கரசுப்பு  சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P4ஆகியோர் உரையாற்றனர் .இறுதியாக நன்றி உரையாக தோழர் C .வண்ணமுத்து அவர்களின் சிறப்பான உரையோடு நம் மாநாடு நிறைவுற்றது .மாநாட்டு பணிகளை எங்களோடு இனைந்து பணியாற்றிய அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு GDS தோழர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 










0 comments:

Post a Comment