...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 1, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
               இலாகா விதிகளுக்கு புறம்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் 
பணிசெய்ய அழைக்கும் நெல்லை கோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தடுத்து 
நிறுத்திட வலியுறுத்தி 01.08.2019 இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் .
 1.தமிழகத்தில் NIGHT POST OFFICE  உள்ள அலுவலகங்களில் மட்டும் .ஆதார் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரிவுபடுத்திடத்தான் உத்தரவே தவிர -பிற தலைமை அலுவலகங்களில் இதுகுறித்து அறிவிப்பு ஏதும் இல்லை .
2.இதுகுறித்து நமது SSP அவர்களிடம் நேரிடையாக விசாரித்தபோதும் பாளையம்கோட்டையில் ஞாயிற்று கிழமை  இயங்க CPMG அவர்களின் உத்தரவு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்கள் 
3.பரிச்சார்த்த முறையில் இயங்கவும் மேல்மட்ட உத்தரவு இல்லை 
4.ஞாயிற்றுக்கிழமை ஒரு அலுவலகத்தை இயக்குவதற்கு DG (P)  அவர்கள் தான் உத்தரவு போட முடியும் .
                       இத்தனை விதிமீறல்களை மீறி ஊழியர்களை கட்டாயப்படுத்தி விடுமுறைநாட்களில் பணிக்கு வரவழைக்கும் கொடுமையை தடுத்துநிறுத்தவேண்டியது நமது கடமை .ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றுதான் நம் துயரோட்டும் என்கின்ற வரிகள் உண்மை என நிரூபிப்போம் .நேற்று நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு மேலும் ஒருகடிதத்தை 
மெ யிலில் அனுப்பிவிட்டு அதன் நகலை நமது மாநிலசெயலர் மற்றும் மண்டலச்செயலர் ஆகியோர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பிவிட்டோம் .நமது மணடலசெயலர் அவர்களையும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைத்தோம் .அதேபோல் நேற்று சென்னையில் இருந்து வந்திருந்த அஞ்சல்நான்கின் தமிழ்மாநிலசெயலர் தோழர் கண்ணன் அவர்களையும் அழைத்திருக்கிறோம் .ஆகவே நமது போராட்டம் வீண்போகாது .நிச்சயம் வெற்றிகான்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது .நமது போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் உள்ள SRMU- LIC -BANK -ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என அழைத்திருக்கிறோம் .அதே போல் நமது பகுதியில் அஞ்சல்நான்கு NFPE GDS மற்றும் AIGDSU சங்கங்களும் ஆதரவு தருகின்றன .மீண்டும் ஒரு புதிய சரித்திரம்  படைப்போம் .
    நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment