...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 21, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
           நேற்று 20.08.2019 அன்று நடைபெற்ற நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டியின் சாராம்சத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன் .20 புதிய சுப்ஜெக்ட்ஸ் மற்றும் 12 பழைய  சுப்ஜெக்ட்ஸ்  என சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது .
ஞாயிறு பணிசெய்வதில் உள்ள பிரச்சினையில் தீர்வு 
நேற்றைய விவாதத்தில் பிரதான பொருளாக ஞாயிறு பணிசெய்ய போடப்பட்ட உத்தரவு குறித்து மிக நீண்ட (சுமார் 20 நிமிடங்கள் )  விவாதத்திற்கு பிறகு யாரையும் கட்டாயப்படுத்தி ஞாயிறு பணிக்கு பணிக்க கூடாது என எழுத்துப்பூர்வமான உத்தரவு பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கு பிறப்பிக்கப்படும் என்பதனை நாம் ஏற்றுக்கொண்டோம் .இந்த பிரச்சினையை நமது CPMG அவர்களிடம் தொலைபேசியில்  இரண்டு முறை பேசி ஒரு தீர்வை ஏற்படுத்துங்கள் என்று நமக்காக ஆதரவு கரம் நீட்டிய மாண்புமிகு 
மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கும் இது தொடர்பாக CPMG அவர்களின் வழிகாட்டுதலை பெற்று நமது மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்களை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து பேசிய நமது கண்காணிப்பாளர் திரு R .சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என பார்க்காமல் ஒட்டுமொத்த ஊழியர்களின் உணர்விற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே நான் பார்க்கிறேன் .நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய நெல்லை அனைத்து துறை தொழிற்சங்க அமைப்புகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .அதனை தொடர்ந்து இதர பிரச்சினைகள் குறித்து வழக்கம் போல் மிக சுமுகமாகவே தொடர்ந்தது .பேட்டியின் முழுமையான விவரங்கள் நடவடிக்கை குறிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment