...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ..

நெல்லை மாநகரத்திற்குள் குறிப்பாக பாளையம்கோட்டை பெருமாள்புரம் மஹாராஜநகர் உள்ளிட்ட முக்கிய அஞ்சலக்ளுக்கு SECOND MAIL  தொடர்ந்து தாமதமாக வருவதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .பல அலுவலகத்தில் இருந்து SECONDMAIL எத்தனை மணிக்கு எவ்வளவு நேரம் கழித்துவந்தாலும் அதுவரை தாபலகாரர்களை காத்து கிடக்க வைப்பது முறையல்ல .நிலைமை இவ்வாறுஇருக்க  நமது ஓட்டுனர்களை குறிவைத்து அவர்களுக்கு வேலைநேரம் முடிந்தபிறகும் மீண்டும் பொறியியல் கல்லுரிக்கு செல் என கூடுதல் வேலைப்பளுவை சுமத்துவது ஏற்புடையது அல்ல ..தினமும்  ஆயிரக்கணக்கில் குவியும் தபால்களை குறித்தநேரத்தில் குறித்த இடத்தில கொண்டுசேர்ப்பதற்கு கூடுதலாக இன்னோரு ஷேடுலை தற்காலிகமாக அமுல்படுத்துவதில் என்ன தவறு ? ஓட்டுனர்களை எதிரிகளாகவும்  அடிமைகளாகவும் நிலைக்கும் மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் .இதுகுறித்து 01.10.2020 அன்று நமது ASP (OD ) அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .மாற்றங்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் ..

நன்கொடையாளர்களுக்கு நன்றி நன்றி 

திருமதி .ராஜலக்ஷ்மி மஹாராஜாநகர் --500  திருமதி ப்ரீத்தா --500 திருமதி ரம்யா 200

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment