...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 21, 2022

 அன்பார்ந்த தோழர்களே !நாளை நடக்கும் கூட்டு ஆர்ப்பாட்டத்தில் நாம் முழங்கும் கொள்கை முழக்கம் --நண்பர்கள் சிலரின் வேண்டுகோள்களுக்கிணங்க .......


வெல்லட்டும் வெல்லட்டும் 

அஞ்சல்  ஊழியர் போராட்டம் 

நாடுதழுவிய போராட்டம் 

வெல்லட்டும் வெல்லட்டும் !


மத்திய அரசே ! மத்திய அரசே !

மத்தியில் ஆளும் BJP அரசே 

மக்கள் சேவை செய்திடும் 

அஞ்சல் துறையினை 

தனியாருக்கு விற்காதே !


விற்காதே விற்காதே !

ஏழை மக்களின் காவலாம் 

கிராமப்புற அரசானம் 

அஞ்சல் துறையினை 

தனியாருக்கு விற்காதே !

தனிநபருக்கு கொடுக்காதே !


சுதந்திர இந்தியாவில் 

மிச்சமிருக்க்கும் ஒரே துறை 

மீண்டுவந்த ஒரே துறை 

எங்கள் துறை அஞ்சல் துறை 

கூறுபோட்டு விற்காதே 

காரணம் ஏதும் சொல்லாதே 


பொதுமக்கள் சேவை செய்யும் 

அஞ்சல் துறையிலே 

லாப நாட்டம் பார்க்காதே !

பார்க்காதே பார்க்காதே! 

லாப நட்டம் பார்க்காதே !


நாளும் பொழுதும் நாங்கள் இங்கே 

தேடி ஓடி சேர்த்த கணக்காம் 

பலகோடி கணக்குகளை 

தாரை நீ வார்க்காதே 

வரலாற்று பிழை செய்யாதே !


எங்கள் படைப்பு சொந்த படைப்பு 

அஞ்சல் காப்பீடு திட்டத்தில் 

பல்லாங்குழி ஆடாதே !

பணம் கிடைக்கும் என்பதற்காக 

படுகுழியில் தள்ளாதே !


அனுமதியோம் அனுமதியோம் 

அஞ்சல் துறையில் தனியாரை 

அனுமதியோம் அனுமதியோம் 


பல கோடி  கணக்குகள் 

பல கோடி வாடிக்கையாளர் 

சொந்தம் கானும் எங்கள் சேமிப்பை

IPPB க்கு மாற்றாதே !


நட்டத்தில் பிறந்த குழந்தை 

IPPB எனும் குழந்தைமீது 

நூற்றாண்டு கடந்த துறையை 

மூனு தலைமுறை பார்த்த துறையை 

விற்றிட துணியாதே !


அமுதசுரபி ஒவ்வொன்றையும் 

அடிமாட்டு விலைக்கு விற்றபின் 

நாடு கண்ட லாபமென்ன ?

நாங்கள் கண்ட மாற்றமென்ன !


வெள்ளையனை வெளியேற்ற 

போராடிய சங்கம் இது !

எல்லை கடந்த போராட்டத்தில் 

நாட்டை காத்த கூட்டமிது !


புரிந்துக்கோ புரிந்துக்கோ !

எங்கள் பங்கை புரிந்துக்கோ !

தெரிந்துக்கோ தெரிந்துக்கோ !

பழைய வரலாறை தெரிந்துக்கோ !


மக்கள் சேவை செய்திடும் எங்கள் 

துறையை பாதுகாப்போம் 

பாதுகாப்பு துறையை கூட விற்க 

நீயும் துணிந்த பின்பும் 

தொடர்வண்டி சேவையைக்கூட 

தனியாருக்கு கொடுத்தபின்பும் 

தொலைத்தொடர்பு சேவையை 

துண்டித்து பார்த்த பின்பும் 

உழைக்கும் மக்கள் கேட்கும் கேள்வி 

உன்னை பார்த்து கேட்கும் கேள்வி 


கார்டு கவர் எல்லாத்தையும் 

காடு மேடு தேடி சென்று

வீடுதேடி விலாசம் தேடி 

கொண்டுசேர்க்கும் எங்கள் துறையை 

விற்றுதான் வாழணுமா ?

அரசுத்துறைகளை விற்றுத்தான் பிழைக்கனுமா ?


SK .ஜேக்கப் ராஜ் மாநில உதவி செயலர் அஞ்சல் மூன்று --நெல்லை 







0 comments:

Post a Comment