...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 26, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

தபால்காரர் COMBINED DUTY  மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது  கொடுக்கப்படும் இழப்பீடு தொகை குறித்து ஏற்கனவே அஞ்சல் வாரியம்14.08.2015 அன்று  தெளிவான உத்தரவுகளை வழங்கியும் கூட பல போஸ்ட்மாஸ்டர்கள் இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் .

ஆகவே ஊழியர்கள் நலன் பெறும் வகையில் மீண்டும் இலாகா உத்தரவை அமுல்படுத்திட வலியுறுத்தி சென்னை பெருமண்டல PMG திரு .நடராஜன் IPS அவர்கள் மீண்டும் அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் 26.10.2022 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 

.அதன்படி COMBINED DUTY பார்க்கின்ற தபால் காரருக்கு ரூபாய் 94 என்றும் இரண்டு தபால்காரர்கள் சேர்த்து ஒரு BEAT வேலையை பார்த்தால் ரூபாய் 47 கொடுக்கப்படவேண்டும் .மேலும் விடுமுறைநாட்களில் பட்டுவாடா செய்யும் தபால்காரருக்கு ரூபாய் 282 என்றும் MTS ஊழியர்களுக்கு  ஒரு மணி நேரத்திற்கு Rs.29 விகிதம்   மூன்றுமணிநேரம் வரைக்கும்  , எழுத்தர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால்  ரூபாய் 41 Per hour , என்றும் சூப்பர்வைசர் மூன்றுமணிநேரத்திற்குள் என்றால்  ரூபாய் 47 per hour  என்றும் வழங்கப்படவேண்டும் .மூன்று மணிநேரத்திற்கு மேல் என்றால் மூன்றுமணிநேர ஊதியம் வழங்கிடவேண்டும் 

இதுபோன்ற ஊழியர்கள் நலன் காக்கும் அதிகாரிகளை நாம் வாழ்த்துவோம் !இதே  PMG அவர்கள் மதுரையில் PMG  ஆக பணியாற்றிய  போது தபால்காரர் பணியிடங்களில் GDS ஊழியர்கள் இல்லை என்றால் வெளியாட்களை அனுமதிக்கலாம் என்ற வரலாற்று உத்தரவை பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஆகவே இனியாவது தலமட்டத்தில் தபால்காரர் தோழர்கள் தயக்கங்கள் ஏதுமின்றி COMBINED DUTY அலவன்ஸை CLAIM செய்திடவேண்டும் ....

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:

Post a Comment