...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 1, 2018

                                    நெல்லை   மாதாந்திர பேட்டி --நவம்பர் 18
நேற்று 30.11.2018 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டி முடிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .
1.ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் Treasury அலவன்ஸ் cash handling allowance ஆக மாறியதால் அதனடிப்படையில் காசாளர்கள் மற்றும் SPM களுக்கு  cash handling allowance வழங்கிட வழிகாட்டுதல் உத்தரவு வழங்கப்படும் அனைத்து SPM தோழர்களும் TREASURY STATISTICS தயாரித்து கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் .மாதம் சராசரி ரூபாய் 5 லட்சம் வரை ரூபாய் 700 5 லட்சத்திற்கு மேல் கையாளும் அலுவலகங்களுக்கு ரூபாய் 1000 CASH HANDLING ALLOWANCE வழங்கப்படும் .இந்த உயர்வு 01.07.2017 முதல் அமுலாகிறது .ஆகவே நமது தோழர்கள் அனைவரும் இதற்கான பணிகளை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .(SPPED போஸ்ட் பில்களையும் அனைத்து தோழர்களும் அனுப்பிவைக்கவும் .நிறுத்திவைக்கப்பட்ட SPEEDPOST இன்சென்டிவ் நமது கோட்ட சங்க முயற்சியால் மீண்டும் வழங்கப்பட்டுவருகிறது )
2.A 4 பேப்பரை பொறுத்தவரை நேற்றே முடிவெடுக்கப்பட்டு  அனைத்து அலுவலங்களுக்கும் தேவைகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் (80G) பேப்பர்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படும் .இந்த அளவு இருமாதங்களுக்கு பரிச்சார்த்த அடிப்படையில் வழங்கப்படும் .மேற்கொண்டு தேவைப்படும் அலுவலங்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் .யாரும் தங்கள் சொந்தக்காசுகளில் அலுவலக உபயோகத்திற்கு காகிதங்கள் வாங்கவேண்டாம் .
3.இடமாறுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பெண்டிங் விருப்பமனுக்கள் பரிசீலிக்கப்படும் .நேற்றே ஓரிரு உத்தரவுகள் பிறப்பிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .
4.புதிய கணினிகள் நமது கோட்டத்திற்கு 40 வரவிருக்கின்றன .பழைய மாடல் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மாற்றிக்கொடுக்க  முன்னுரிமை கொடுக்கப்படும் .
5.கலக்ட்ரேட் அலுவலகத்தில் உள்ள பழைய MIS பில்கள் (2014-2017 ) PASS பண்ணப்படும் .
6.2006 முதலான ஆரம்ப ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய பாளை மற்றும் அம்பை போஸ்ட்மாஸ்டர்களுக்கு வலியுறுத்தப்படும் .சராசரியாக நிலுவைத்தொகை 95000 என்பதால் சில அதிகாரிகள் தயக்கம் காட்டுவது தேவையற்றது என எடுத்துரைக்கப்பட்டது .
7.ATR பதவிகள் கேடேர் பதவியுயர்வு உத்தரவு வரும் வரை நிரப்பப்படாமல் இருக்கும் .
8.HSG II மற்றும் HSG I பணியிடங்களுக்கு மீண்டும் OFFICIATING பார்க்க விருப்பமனுக்கள் கோரப்படும் .
9.விடுபட்ட எழுத்தர்களுக்கான CONFORMATION குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் .
10.தோழர் வெண்ணிக்குமார் அவர்களின் இரண்டு கோரிக்கைகளும் மிக விரைவாக முடிக்கப்படும் 
11.திருநெல்வேலி உப கோட்ட அதிகாரி தான் செல்லும் இடங்களிலெல்லாம் தேவையில்லாமல்  ஊழியர்களிடம் நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டியதிருக்கும்  என  திரும்ப திரும்ப சொல்லிவரும்  புதுவித மிரட்டல் பழக்கத்தை கைவிடவேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .
12.எந்த தலைமை அஞ்சலகத்திலாவது டெபுடேஷன் TURN மீறப்பட்டதாக உணர்ந்தால் உடனே கோட்ட செயலருக்கு தகவல்களை தெரிவிக்கவும் .கண்காணிப்பாளர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக முறையாக நடத்த உறுதியளித்துள்ளார்கள் .
 (அஞ்சல் நான்கு சப்ஜெக்ட் கள் தனியாக வெளியிடப்படும் )
        நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள்  நெல்லை .

0 comments:

Post a Comment