...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 9, 2020

08.01.2020 வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி --நமது நெல்லை கோட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வீர வாழ்த்துக்கள் 
                      இழப்பதற்கு ஒன்றுமில்லை ...அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது தோழர்களே !
               19991 யில் இருந்து நேற்று நடந்த வேலைநிறுத்தம் 19 வது வேலைநிறுத்தம் .இதில் நாடெங்கிலும் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர் .அஞ்சல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான NFPE -FNPO-AIGDSU சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றன .கோட்ட அலுவலகம் தொடங்கி இதர தலைமை அஞ்சலங்கள் (ஒருசிலரை தவிர ) முழுமையாக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தந்தன .MMS மற்றும் PSD முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன .எப்படியாவது பட்டுவாடாவை நடத்திடவேண்டும் என்ற முனைப்பில் நேரடியாகவே கோட்டநிர்வாகம் களத்தில் இறங்கியும் 5 அலுவலகத்தில் மட்டுமே பட்டுவாடா நடைபெற்றதாக காட்டிக்கொண்டனர் .பாளையங்கோட்டையில் அவர்களின் பட்டுவாடா முயற்சி படு தோல்வி அடைந்தது .துணை அஞ்சலகங்களை பொறுத்தவரை NFPE -FNPO ஊழியர்கள் பணியாற்றிய அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன .திசையன்விளை சங்கர்நகர் பெருமாள்புரம் என HSG I &HSG II அலுவலகங்கள் மூடப்பட்டன .பணிஒய்வை ஒட்டியுள்ள தோழர்களுக்கு   பணியாற்றிட  அனுமதிக்கப்பட்டது .அதனால் அவர்கள் யாரும் வருத்தப்படத்தேவையில்லை .மேலும் சங்கங்களை தாண்டியும் சில சங்கடங்களை தாண்டியும் நம்மோடு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .முன்னதாக பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் C.வண்ணமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை .


0 comments:

Post a Comment