...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 7, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
                                       08.01.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் .
   இரண்டு கால்கள் உள்ள எல்லாராலும் நடக்க முடியும் -இரண்டு கைகள் உள்ள எல்லாராலும் எழுதமுடியாது என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுப்படி யார் வேண்டுமானாலும் சங்கம் அமைக்கலாம் ஆனால் எல்லா சங்கத்தாலும் போராட முடியாது .ஆம் அஞ்சல் துறையை பாதுகாக்க வேண்டிய புனித போரில் நம்மால் மட்டுமே பங்கேற்கமுடியும் என்பதில் பெருமை கொள்வோம் .நாளை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யாமல் ஒதுங்கி கொண்டால் உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும் எத்தனை மணிக்கும் வரலாம் எத்தனை மணிக்கும் போகலாம் அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்லவில்லையா ? சேமிப்புக்கணக்குகளை பிடிக்கவில்லையா ? அப்பொழுது தெரியும் நிர்வாகத்தின் உண்மை முகம் .இதோ தொழிலாளியின் உணர்வை தட்டியெழுப்பிய ஒரு குரலை கேளுங்கள் !
அஞ்சல் தொழிற்சங்கத்தின் நிறுவன தலைவர் தோழர் பாபுதார பாதா 1921 யில் லாகூர் மாநாட்டில் ஆற்றிய தலைமையுரை ....
நமது அழுகைகளும் கூக்குரலும் கருணை மனுக்களும் வேண்டுகோள்களும் பலனளிக்கபோவதில்லை .தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல கொடுப்பதை பெற்றுக்கொள்ள !
என் தோழர்களே !நீங்கள் உதாசீனப்படுத்துவதை உணருகிறீர்களா ?உங்கள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? அப்படி எண்ணினால் உங்களுக்கு ஒரு வழி தான் உண்டு ஒரே ஒரு வார்த்தை தான் ஒன்றுபடுங்கள் உயர் அதிகாரிகள் உங்களை மதிக்கவேண்டும் என்றால் ......உங்களை பாதிக்கும் நிர்வாக முடிவுகளில் உங்களை அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றால் உங்கள் கருத்துக்கள் ஏற்கப்படவேண்டும் என்றால் ஒன்றுபடுங்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------
வேலைநிறுத்த அறிவிப்புகளின் எதிரொலி GDS கோரிக்கைகளின் மீது அஞ்சல் வாரியம் அறிவித்த அடுத்தடுத்து  உத்தரவுகள் 
*Combined duty allowance தொடர்பாக அனைத்து single handed BO களில் BPM கள் Mail carrier & Mail delivery பணிகளை சேர்த்து பார்க்கும் போது  பணி நேரம்  4 மணி நேரம் அல்லது 5 மணி நேரத்திற்கு மேலாக உள்ளதா என கேட்டு அனைத்து Circle office க்கும் விவரங்களை கேட்டு இலாகா*.6.01.2020 சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .
*Additional increments தொடர்பாக இலாகாவால் அமைக்க கமிட்டி
*விடுப்பு சேமிப்பு 180 நாட்கள் தொடர்பாக இலாகாவால் அமைக்க பட்ட கமிட்டி
                    ஒரு வேலைநிறுத்த அறிவிப்பிற்கு பிறகுதான் அஞ்சல் வாரியம் தனது மௌனத்தை கலைக்கிறது .ஒரு அரசாங்கத்தின் மௌனத்தை கலைக்க இன்னும் தொடர் இயக்கங்களை நடத்திடுவோம் 
வெல்லட்டும் !வெல்லட்டும் ! நாடுதழுவிய வேலைநிறுத்தம் வெல்லட்டும் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment