...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 10, 2020

                                                    முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
   *நமது  கோட்ட   கண்காணிப்பாளர் அவர்களுடனான இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 24.01.2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி பிரச்சினைகள் இருந்தால் 13.01.2020 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
  * தென்பகுதியில் நமது இயக்கத்தை இயக்கி வந்த அருமை அண்ணன் T .சுடலையாண்டி SPM வள்ளியூர் பேருந்துநிலையம் அவர்கள் 13.01.2020 அன்று தன்விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அன்று மாலை அண்ணனது இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் (பணகுடியில்) நமது முன்னணி தோழர்கள் அனைவரும் கூடிடுவோம் .
 * CSI யின் அடுத்த கட்டமாக கணக்கு பிரிவு மீண்டும் DECENTRALIZE ஆகின்றது .அதன்படி மீண்டும் மாத சம்பளம் அந்தந்த தலைமை அஞ்சலகத்தில் கொடுத்திட உத்தரவுகள் விரைவில் வரவிருக்கிறது .இதற்கு முன்னோட்டமாக சென்னை அண்ணாசாலை தலைமைஅஞ்சலகத்தில் டிசம்பர் மாத ஊதியமே அண்ணாசாலை தலைமைஅஞ்சலகத்தில் 31.12.2019 அன்று வழங்கப்பட்டுள்ளது .இனி ஊதியத்திற்காக அடுத்தவரை கையேந்தி காத்திருக்கும்  நிலை வராது .....ஆகவே இனிமேல் கணக்கு பிரிவு என்பதே இருக்காது அல்லது நீடிக்காது என்ற கூற்று பொய்யாகிறது ...
* ஓவ்வொரு DDO (தலைமைஅஞ்சலகத்திற்கும் )ஒரு AAO நியமிக்கப்பட உள்ளார்கள் .அதேபோல் ஒவ்வொரு கோட்ட அலுவலகத்திலும் ஒரு ACCOUNTS OFFICER (AO ) நியமிக்கப்படவுள்ளார்கள் ..இனிமேல் வவுச்சர் செக்கிங் உள்ளிட்ட எதுவும் ஆடிட் அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இருக்காது ...
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P3    -P.பாலகுருசாமி  கோட்டசெயலர் P4 (பொறுப்பு ) 

0 comments:

Post a Comment