...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 25, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                        டார்கெட் நெருக்கடிகளை கண்டித்து இன்று மாலை 05.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் ..

                      அதேபோல்  27.01.2022 அன்று நடைபெறும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிடவும் அதன் புகைப்படங்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .கருப்பு பேட்ஜ் அனைத்து அலுவலகங்களுக்கும் கிளை அஞ்சலகங்கள் உட்பட அனைவருக்கும் இன்று அனுப்பிவைக்கப்படும் .27.1.2022 அன்று காலையில் அனைவருக்கும் கிடைக்கும் .

                இன்னும் மார்ச் இறுதிவரை நமது ஊழியர்க்ளுக்கு தொடுக்கப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் .பணிபுரிகின்ற இடத்தில அது GDS என்றால் என்ன ?தபால்காரர்களாக இருந்தால் என்ன ?SPM ஆக இருந்தால் என்ன ?அனைவரும் நிம்மதியாக பணியாற்ற வேண்டும் ..மணிக்கொருமுறை தொலைபேசி கணக்கில இருந்து விடுபடவேண்டும் ...அச்சமில்லாமல் பணியாற்ற வேண்டும் .

        நமது ஆர்ப்பாட்டத்திற்கு இன்று நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது .மாநில சங்கங்கள் சார்பாக மாநில /மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன ...போராடும் எந்தவொரு கோட்டமாக இருந்தலும் அது தனித்து விடப்பட்டதில்லை ...கோடி கால் பூதமடா ! கோரிக்கைகளின் ரூபமடா !என்ற வரிகள் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது ..

                   ஒற்றுமையே நமது பேராயுதம் ! போராட்டமே நமது தீர்வு !

போராட்ட வாழ்த்துக்களுடன் -கூட்டு போராட்ட குழு நெல்லை 

0 comments:

Post a Comment