...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 24, 2013

                                          பேச்சுவார்த்தையில்  உடன்பாடு 


அன்பார்ந்த தோழர்களே !

                      19.10.2013 அன்று நடைபெற்ற நமது செயற்குழுவில் எடுக்கப்பட்ட 
முடிவின் அடிப்படையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நாம்  21.10.2013 அன்று  கொடுத்த மெமோரண்டம் அடிப்படையில் 
24.102013 மாலை  நமது கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை 
நடைபெற்றது .நிர்வாகத்தின் சார்பாக நமது SP திரு கண்ணபிரான் அவர்களும் , ASP H /O திரு .ரகுநாத் அவர்களும்    கலந்து கொண்டார்கள் .நமது சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ் மற்றும் C .வண்ணமுத்து  ஆகியோர்  கலந்து 
கொண்டார்கள் .GDS சார்பாக தோழர் S .காலபெருமாள் ,C .சரவணகுமார் 
ஆகியோர்  கலந்து  கொண்டார்கள் .மாலை 6.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 07.45 வரை நடைபெற்றது .கீழ்கண்ட பிரட்சினைகளில் 
உடனடி தீர்வு  ஏற்பட்டது .

1.PRI (P ) திருநேல்வேலிக்கு CALL FOR செயப்பட்டு விட்டது .

2.MACP  பயிற்ச்சிக்கு செல்லும்  ஊழியர்களுக்கு 04.11.2013 BATCH முதல் 
முன்பணம் ரூபாய் .3000 வழங்க நேற்று 24.10.201.3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் PTC இல் கட்டும் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் உயர்த்தி கொடுக்கப்படும் .

3.LRPA பட்டியல் இன்றிலிருந்து எந்நேரமும்   வெளி வரும் .LRPA எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்  நாம் ஏற்று கொள்வதாக தெரிவித்தோம் .

4.சங்கர்நகர் மற்றும் டவுன் அஞ்சலகங்கள் குறித்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் தகவல்கள் நமக்கு கொடுக்கப்படும் .

5.பாளையம்கோட்டை ATR நியமனத்தில் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஏற்கமுடியாது என்பதை பதிவு செய்துள்ளோம் .

                           GDS கோரிக்கைகள் 

1..மேலப்பாளையம் SO வில் GDSSV பதவி GDSMD பதவியாக மாற்றப்படும் 
.
2.15.10.2012க்கு பிறகு GDS BPM களுக்கு ஊதிய பிடித்தம் இருந்தால் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் .நேற்றே நான்கு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யகூ டாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது .

3.புதிய நியமனங்களுக்கு 16.07.2012 உத்தரவு படி பழைய TRCA அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய மூன்று தலைமை அதிகாரிகளுக்கும் நினைஊட்டும்கடிதம் அனுப்பப்படும் .

4.GDS GRADATION LIST குறித்த நிர்வாகத்தின் நிலையை கருத்தில் கொண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது .

5.GDS OUT SIDER களுக்கான நிலுவை தொகை குறித்து மண்டல நிர்வாகத்தின் 
அனுமதிக்காக எழுதிய கடிதம் நமக்கு தரப்படும் .

                   இன்னும் இரண்டு நாட்களில் எழுத்துபூர்வமான   பதில் 
வந்தவுடன் நமது முடிவுகளைஅதிகார பூர்வமாக  தெரிவிப்பதாக அறிவித்து விட்டு வந்தோம் 

                                 வாழ்த்துக்களுடன் 

                                                              SK .ஜேக்கப்ராஜ் .
  . 
.
       

0 comments:

Post a Comment