...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 6, 2015

                                        முக்கிய செய்திகள் 

1.போனஸ் பெறும் சீலிங்கை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே துறையின் NFIR தொழிற்சங்கமும் வலியுறுத்தி வருகிறது .

2.நெல்லை மாவட்டத்தில் இரவு நேர காவலாளி பணிக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 234 நிர்ணயிக்கப்பட்டுள்ளது .நமது அலுவலகங்களில் இரவு நேர காவலாளிக்கு இதுவரை வழங்கி வந்த ஊதியம் ரூபாய் 136.

3.இன்று 06.10.2015 அன்று கோட்ட கண்காணிப்பாளரை சந்திக்க உள்ளோம் .
      # CBS  C கிளாஸ் அலுவலகங்களில் CBS பயிற்சி பெறாத ஊழியர்களை [Deputation அனுப்புவதை தவிர்க்க வேண்டும்
     # இடமாறுதல் குறித்து ஊழியர்களின் பெண்டிங் விண்ணபங்களை பரீசீலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இருக்கிறோம் .உங்களுக்கு யாருக்காவது தேவைகள் இருந்தால் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் .

4.சுமார் மூன்று மாதங்களாக பொறுப்பு கோட்ட செயலராக சிறப்பாக பணியாற்றிய தோழர் C .வண்ணமுத்து அவர்களுக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 

.                                         வருந்துகிறோம்

தோழியர் B. சங்கரி GDS பேக்கர் சமாதானபுரம் அவர்களின் தாயார் திருமதி லட்சுமி அம்மாள் (85 ) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 06.10.2015 மதியம் நடைபெறுகிறது .

                                                                    நன்றி 
                                                                                    தோழமையுடன் 
                                                                                      SK .ஜேக்கப் ராஜ் 


0 comments:

Post a Comment