...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 15, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 நெல்லை கோட்ட நிர்வாகம் டெபுடேஷன் பிரச்சினையில் காட்டுவது அலட்சியமா ? பாரபட்சமா ?
குமுறும் ஊழியர்கள் -நிர்வாகம் சீர்படுத்துமா ?சீர்படுத்தனுமா ?

   மற்ற கோட்டங்களை ஒப்பிடுப்பார்க்கையில் நமது கோட்டத்தில் ஊழியர்களின் மீது தேவையில்லாத அச்சுறுத்தல்கள் -பழிவாங்கல்கள் -RULE 16 இன் கீழ் தண்டனைகள் என அவ்வளவாக இல்லை .அதனால் தான் நாமும் நிர்வாகத்தோடு ஒருசுமுகமான போக்கை கடைபிடித்து வருகிறோம் .ஆனால் சமீபத்தில் டெபுடேஷன் பிரச்சினையில் சிலபகுதி ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது .
குறிப்பாக வள்ளியூர் அஞ்சலகம் 12 அலுவலகங்களுக்கு CASH OFFICE ஒரு காலத்தில் HEADOFFICE ஆக மாறுவதற்கான தகுதி படைத்திருந்தது .அப்படி வேலைப்பளுவுள்ள வள்ளியூர் அஞ்சலகத்திற்கு தொடர்ந்து டெபுடேஷன் .மூன்று எழுத்தர்கள் கூட இல்லாமல் வள்ளியூர் அஞ்சலகத்தை இயக்க சொல்லுவது நியாயமா ? ICPETTAI -மானுர் -பணகுடி போன்ற வேலைப்பளு அதிகமுள்ள A கிளாஸ் அலுவகத்தில் எத்தனை நாட்கள் தனிநபர் வேலைபார்த்த கொடுமை தொடர்கிறது -ஆனால் மாறாக மாநகர் பகுதியிலுள்ள சில LSG அலுவலகத்தில் நாற்காலிகள் போட இடமில்லாமல் நிரம்பி வழிகிறது மேலும் ஒரு ஆள் விடுப்புக்கும் அந்த LSG அலுவலகத்திற்கு டெபுடேஷன் கொடுக்கப்படுகிறது .ஒரு அலுவலகத்தில்  DEPUTATION உத்தரவை பார்தவுடன்  VIP களுக்கு  விடுமுறை  கொடுக்கப்படுகிறது .கோட்டநிர்வாகம் எல்லாருக்கும் பொதுவாக நடக்கவேண்டும்.இதுகுறித்து விரிவான புகார் கடிதம் கோட்ட சங்கத்தால் கொடுக்கப்படவுள்ளது .தேவைப்படும்பட்சத்தில் எந்தெந்த அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் அனுப்பப்பட்டுவருகிறது எந்தெந்த அலுவலகங்கள் மழை மறை பிரதேசம் போல் டெபுடேஷன் மறை அலுவலகம் என்பதனை தகவல் பெறும் உரிமைச்சட்டம்  மூலம் கேட்டு அடுத்த கட்ட இயக்கங்களை முன்னெடுத்து செல்லப்போகிறோம் .ஆகவே உங்கள் பகுதி பிரச்சினைகளை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க கேட்டு கொள்கிறேன் .ஊழியர்கள் பிரச்சினைகளை ஆர்வமாகவும் -நம்பிக்கையுடனும் கோட்ட சங்க கவனத்திற்கு கொண்டுவரும் அன்பு தோழர்களுக்கு நன்றி !நன்றி !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment