...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 31, 2018

நமது சம்மேளன செயலர் -அஞ்சல் மூன்றின் உதவி பொதுச்செயலர் தோழர் S .ரகுபதி அவர்களின் தன்விருப்ப ஓய்வு -01.09.2018 

         அஞ்சல் தொழிற்சங்கத்திற்கு கிடைத்திட்ட 
         அபூர்வ தோழனே !
         ஆழமான கொள்கைகளை அடிமனதில் தாங்கியும் 
          ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி -
        ஆசைகளுக்கு அசைந்துகொடுக்காத 
        அதிசய தலைவனே !
        காட்சிக்கு எளியவனே ! தான்சார்ந்த 
         கட்சிக்கு  வலிமையானவனே !
         ஒப்பனை கிடையாது --உன் 
         தோற்றத்திலும் -வார்த்தைகளிலும் 
         ஒப்புக்காக எதையும் 
          ஏற்றதும் கிடையாது 
          அஞ்சாநெஞ்சன் பாலுவால்  -அதிகமாய் 
          வியந்து பேசப்பட்ட 
          ஆச்சர்யம் நிறைந்த ஆளுமை உனக்குண்டு 
            திண்டுக்கல் மாநாட்டில் கூட்டணி மலர்ந்த போதும் 
          திருநெல்வேலியில் உதிர்ந்தபோதும் 
          அதே அடக்கத்தோடும் -அமைதியோடும் 
          முடிவை அறிவித்தவன் நீ 
          சில நேரங்களில் -நாம் விரும்பியும் 
          சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டாத போதும் 
           நாகரீகமாய் நடந்துகொண்டவன் நீ -
           அடுத்தவர் மீது பழிபோடாமல் மௌனமாய் 
           நகர்ந்து சென்றவன் நீ 
          செம்மலரே ! செங்கதிரே !
           உன்னை வாழ்த்துகிறோம் ! 
          பொதுவாழ்வில் உன் பணி தொடர வரவேற்கிறோம் 
                தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 


0 comments:

Post a Comment