...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 1, 2018

                                                முக்கிய செய்திகள்
    மீண்டும் அஞ்சலகம் மூலம் OAP மணியார்டர் சேவையை பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது .இது குறித்து தமிழகஅரசு செய்திக்குறிப்பு எண் 799 தேதி 31.10.2018 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .மொத்தம் உள்ள பயனாளிகள் 29,48,527 பேர் மீண்டும் தங்கள் தங்கள் வீடுகளி லேயே ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் .அஞ்சல் சேவையின் மகத்துவத்தை பாதுகாப்போம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நாளை 02.11.2018 அன்று பாளையம்கோட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .இதற்கான சுற்றறிக்கை இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் .கருப்பு பேட்ஜ் இன்று எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும் .நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது 02.11.2018 மற்றும் 03.11.2018 ஆகிய நாட்களில் தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற கேட்டுக்கொள்கிறோம் .அதற்கான புகைப்படங்களை நமது NELLAI NFPE வாட்ஸாப்ப் குழுவில் பதிவிடவும் கேட்டுக்கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. 183308 பயனாளிகளுக்கு மட்டுமே அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும்.இது மொத்த பயனாளிகளில் 6.21% மட்டுமே.

    ReplyDelete