...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 1, 2019

 அன்பார்ந்த தோழர்களே !
   நேற்று (31.05.2019 ) நடந்த மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்களில் சில ....முழு விபரங்கள் நடைமுறை குறிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .சுமார் 25 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் கிட்டத்தட்ட 1.40 மணிநேரம் நடந்த பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது .
1.நமது கோட்டத்தில் உள்ள அனைத்து ATR /TR பதவிகளை நிரப்பிட புதிய விருப்பமனுக்கள் கோரப்படும் .
2.PA INDUCTION பயிற்சிக்கு செல்பவர்களுக்கு அங்கு கட்டவேண்டிய தொகை +DA  முன்பணமாக வழங்கப்படும் 
3.அனைத்து SO களுக்கும் சிறுசேமிப்பு முகவர்களுக்கான NSI வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்படும் .
4.CASH HANDLING ALLOWANCE இலாகாவின் 22.01.2019 உத்தரவு படி வழங்கப்படும் .இதற்கான STATISTICS வழங்குவது தொடர்பாக கோட்ட அலுவகலத்தில் இருந்து  சுற்றறிக்கை வெளியிடப்படும் .இதனால் ஜூலை 2017 முதல் TR/மற்றும் SPM(C&B) நிலுவை தொகை பெறுவார்கள் .
5.HSG 1 மற்றும் HSG II பதவிகளுக்கு ஏற்கனவே 21.12.2018 அன்று வெளியிடப்பட்ட விருப்ப கடிதங்கள் தொடர்பானஅறிவிப்பு ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிப்பு  வெளியிடப்படும் .
6.CEA 150 ஊழியர்களுக்கு சாங்க்ஷன் செய்யப்பட்டுள்ளது .நிர்வாக நடைமுறையினால் கிரெடிட் செய்யமுடியவில்லை .இந்த வாரத்தில் அனைவருக்கும் கிரெடிட் செய்யப்படுகிறது .மீதமுள்ள 30 பேருக்கும் படிப்படியாக BILL கள் சாங்க்ஷன் செய்யப்பட்டு அனுப்பப்படும் .
7.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக பராமரிப்பு பணிகளுக்காக  ரூபாய் 3.70 சாங்க்ஷன் ஆகியுள்ளது .விரைவில் மண்டல அலுவலத்தில் இருந்து பணிகள் தொடங்கபடும் .
8.டெபுடேஷன் செல்பவர்களுக்கான முன்பணம் அதிகரித்து வழங்கப்படும் .ஏற்கனவே நிலுவையில் உள்ள TA தொகைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு கேட்டு RO க்கு அனுப்பப்படும் .
9.DGL மற்றும் LRPA பட்டியலில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது நிர்வாகமும் மிக வெளிப்படையாகவே LRPA பட்டியலில் இடையில் சில பெயர்கள் தவறுதலாக விடுபட்டத்தை .ஒத்துக்கொண்டு விரைவில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றுஏற்றுக்கொண்டது  பாராட்டுதலுக்குரியது .பொதுவாக நிர்வாக தவறுகளை அவ்வளவு எளிதாக எந்த அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள் .நமது அதிகாரிகள் அதற்கு நமது SSP  அவர்கள் விதிவிலக்கு என்பது உள்ளபடியே சிறப்பான அம்சம்தான் .
10.இரண்டு தலைமை அஞ்சலக MDW மாற்ற 15 நாட்களுக்குள் அனுப்பிட தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்படும்
11.TBOP /BCR பதவியுர்வுக்கு INDUCTION TRAINING காலத்தை சேர்ப்பதற்கான DPC ஜூன் மத்தியில் கூடுகிறது 
12.சங்கர்நகர் SO க்கு வருகிற திங்கள் கிழமை எலெக்ட்ரிசன் அனுப்பப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் புதிய இடத்தில் அலுவலகம் 
செயல்படும் .இத்தனை காலம் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பணியாற்றிய தோழர்கள் இனி புதிய சூழலில் பணியாற்றுவார்கள் .
13.பாளையம்கோட்டை தோழியர்களுக்கான டைனிங் /ரெஸ்ட் ரூம் கான வரைவு திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன .முதல் தளத்தில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கான இடமும் பயிற்சிமையம் போஸ்ட்மாஸ்டர் QUARTERS க்கு மாற்றப்படவுள்ளன .
14.தலைமை அஞ்சலகத்தில் ஜெனரல் பிரிவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம்செய்திட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
16.நிலுவையில் உள்ள LTC  தொகை உரிய இருவருக்கு ஒருவாரத்திற்குள் திருப்பி கொடுக்கப்படும் 
15.இறுதியாக நமது கோட்ட சங்க பொருளாளருக்கு உடனே IMMUNITY அடிப்படையில் RELIEVE செய்யப்படுவார் என்ற நல்ல செய்தியோடு பேட்டி இனிதே முடிவுற்றது ..
அஞ்சல்நான்கின் பிரச்சினைகள் குறித்தமுடிவுகள் நாளை பதியப்படும் 
         நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை  

0 comments:

Post a Comment